Thursday, March 7, 2019

ஹெரோயினுடன் ஒருவரும், சட்டவிரோத 30 புகலிடக் கோரிக்கையாளர்களும் கைது

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் பதுளை, பின்அராவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை, விஷத் தனமையுடைய போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைதான சந்தேகநபரிடமிருந்து 15 கிராமும் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதனிடையே படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்த 30 புகலிடக் கோரிக்கையாளர்கள் கடற்படையினரால் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான வேறு தகவல்கள் வெளியாகவில்லை. இந்தநிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com