Wednesday, February 6, 2019

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு நாம் ஆதரவு வழங்கப் போவதில்லை - TNA, எதிராக வாக்களிப்போம் - ஐ.ம.சு. கூ

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தாம் ஒரு போதும் ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் தமது நிலைப்பாட்டை இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பெரிய கட்சியொன்றுடன் தேசிய அரசாங்கம் அமைத்து, அதன் மூலம் நாடாளுமன்றத்தில் பலத்தை ஸ்தீரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை வழங்க, நாம் பின்னிற்க மாட்டோம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு நேற்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணைக்கு தாம் எதிராக வாக்களிக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கி அமைச்சுப் பதவிகளை அதிகரிப்பதற்கான பாராளுமன்ற அனுமதியை பெற்றுக்கொள்ளும் பிரேரணையை, சபநாயகரிடம் அண்மையில் கையளித்தார். இந்த பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com