Wednesday, February 6, 2019

கிரலாகல தூபி மீதேறி நிழற்படம் எடுத்தமை தொடர்பான வழக்கு முடிவுற்றது

கிரலாகல தூபி மீதேறி நிழற்படம் எடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 8 பல்கலைக்கழக மாணவர்களும், தண்டப் பணம் விதித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் இறுதி வருடத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் எண்மரும், கெப்பித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இவர்கள் மீது மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஹொரவப்பொத்தான பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இதில் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு 1000 ரூபா அடிப்படையில் அரசாங்கத்திற்கு தண்டப் பணம் செலுத்தவேண்டிய அதேநேரம், ஏனைய குற்றச்சாட்டுகளுக்காக தலா 50,000 ரூபா தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com