Sunday, February 24, 2019

கொள்ளுப்பிட்டி ஹெரோயினை பாரவையிட்டார் ஜனாதிபதி - சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல்

கொள்ளுப்பிட்டியில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 07 நாட்களுக்கு குறித்த இருவரையும் தடுத்து வைத்து விசாரணை நடாத்த, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு, புதுக்கடை மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான் லோசனா அபேவிக்ரம இன்று உத்தரவிட்டார். சுமார் 2945 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய நாட்டில் கைப்பற்றப்பட்ட மிகப் பாரியளவான ஹெரோயின் தொகையுடன் குறித்த இரண்டு பேரும் கைதாகி இருந்தனர்.

இந்த நிலையில், கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான ஹெரோயின் போதைப்பொருட்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, குறித்த போதை பொருளை கண்டுபிடித்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோருக்கு ஜனாதிபதி பாராட்டி பேசியுள்ளார்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்கால சந்ததியினருக்காக ஆற்றிய உன்னத பணி என்று தெரிவித்த ஜனாதிபதி, இவ்வகையான செயற்பாடுகளுக்கு தனது பூரண ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com