Sunday, February 24, 2019

மாகாண ஆளுநர்கள் சந்திப்பும் அரசாங்கத்திற்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கையும்

மாகாண சபை ஆளுநர்கள் இணைந்து காலியில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாண சபையைச் செயலிழக்கச் செய்து மாகாண சபைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, மாகாணங்களில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்டு இருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை விரைவுபடுத்த வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். தென் மாகாண ஆளுநரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க, கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிப்பதற்காக பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளை இலக்காகக் கொண்டு இவ்வாண்டு பாசிக்குடா, தொப்பிகல, மற்றும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கு ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பின் இயற்கையினை ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இவ்விடயம் தொடர்பான விளம்பரங்களை ஐரோப்பிய நாடுகளில் வழங்கும் வகையிலும் விஷேட ஏற்பாடுகள் இடம் பெறவுள்ளன.

இந்த நிலையில், நடைமுறை படுத்தவுள்ள இவ்வாறான திட்டங்களுக்கு அனைத்து திணைக்களங்களும் தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com