Sunday, February 24, 2019

வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவரும் ஆமை முட்டைகளுடன் மற்றொருவரும் கைது

ஒருதொகை வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று கற்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கற்பிட்டி நகரில் உள்ள மருந்தகம் ஒன்றில் வெளிநாட்டு சிகரட் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 45 பாக்கெட்ரில் அடைக்கப்பட்ட 900 வெளிநாட்டு சிகரட்களை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றி உள்ளார்கள்.

இதனிடையியேவ், 60 ஆமை முட்டைகளை தம் வசம் வைத்திருந்த ஒருவர் தெவிநுவர, வெல்லமடம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினரின் தகவலுக்கு அமைய கந்தர பொலிஸார் நேற்று சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டு 50 வயதுடைய சந்தேகநபரை ஆமை முட்டைகளுடன் கைது செய்துள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com