Sunday, February 24, 2019

ஆசிரியர் சங்கம் மீண்டுமோர் போராட்டத்திற்கு தயாராகின்றது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அதிபர் ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்றை மேற்கொள்ள ஆயத்தமாகி உள்ளது.

* 22 வருடங்கள் பிற்போடப்பட்ட சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளத்தை உயர்த்து!
*கொள்ளையடிக்கப்பட்ட 30 மாத கால நிலுவை சம்பளத்தை உடன் வழங்கு!
*படிவங்கள் நிரப்புதல் உட்பட மேலதிக வேலைகளை நிறுத்தி கற்பிக்க ஆசிரியர்களுக்கு இடம் கொடு!
*நீக்கப்பட்ட ஓய்வூதிய சம்பளத்தை மீண்டும் பெற்றுக் கொடு!
*பாடசாலைகளில் ஒழுக்கத்தை பேணுகின்ற ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்!

மேற்கூறப்பட்ட கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான எதிர்வரும் 26 ஆம் திகதி வடமாகாண ஆசிரியர் அதிபர்களின் சார்பாக யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும். தேசிய ரீதியிலான போராட்டம் 28 ஆம் திகதி கொழும்பு கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம் நடைபெற இருப்பதால் அனைத்து அதிபர் ஆசிரியர்களையும் கட்சி பிரதேசம் தொழிற்சங்க பேதங்களை மறந்து எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அனைவரையும் ஒன்றிணைய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அழைப்பு விடுத்துள்ளார்.



S. Pradeep
0713280729
0773080729

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com