Sunday, February 24, 2019

போதையை குழிக்குள் புதைத்திடுவோம். வெலிகம வில் ஆர்ப்பாட்டம்.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்காக நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதும் வரலாறு காணத அளவில் அண்மைக்காலமாக போதைப்பொருட்கள் மீட்டகப்பட்டுவருவதும் யாவரும் அறிந்தது.

அந்த வரிசையில் இன்று வெலிகம பிரதேசத்தில் போதையை குழிக்குள் புதைத்திடுவோம், நாம் போதையினுள் புதையாமல் இருந்திடுவோம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

போதைப்பொருள் பாவனை அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இளைஞர் யுவதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரதேசத்திலுள்ள இளம் புத்திஜீவிகள் சிலரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் இயக்க வேறுபாடின்றி பிரதேச மக்கள் ஆர்வத்துடன் கலந்திருந்தனர்.

இந்நிகழ்வில் வெலிகம உப பொலிஸ் பரிசோதகர், வைத்தியர் பியசிரி, சட்டத்தரணி ரமீஸ் பசீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com