Thursday, February 21, 2019

நாட்டில் இப்போதுள்ள முக்கிய பிரச்சினை, போதைப்பொருள் அல்ல - மஹிந்த தேசப்பிரிய.

நாட்டில் தற்போது எழுந்துள்ள முக்கிய பிரச்சினை போதைப்பொருள் அல்ல. மாறாக திட்டமிட்ட குற்றச் செயல்களை புரிந்தவர்கள், மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகின்றமையே, இந்த நாட்டிலுள்ள முக்கிய பிரச்சினை என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய திட்டமிட்ட குற்றங்களை புரிந்தவர்கள், ஒருபோதும் மக்கள் பிரதிநிதிகளாக உருவெடுத்து, மக்களை ஏமாற்ற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து வரவுள்ள தேர்தலிலும், குற்றம் இல்லாதவர்கள் வேட்பாளராக போட்டியிட்டு, அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. எனவே அதற்கு இடமளிக்காது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com