Thursday, February 21, 2019

இந்த அரசாங்கத்தில், புதிதாக எந்தவொரு சர்வதேச முதலீடுகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை - மஹிந்தானந்த அளுத்கமகே

இலங்கையில், தற்போதைய அரசாங்கத்துக்கு கீழ் புதிதாக சர்வதேச முதலீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென, போது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து கருத்து வெளியிட்ட போதே, மஹிந்தானந்த அளுத்கமகே இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளே, இதற்கு மிக முக்கிய காரணமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச முதலீடுகளே, இன்றும் நாட்டுக்கு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com