Thursday, February 21, 2019

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிக்க, புதிய யோசனை ஒன்று முன்வைப்பு - சமிந்த விஜேசிறி

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கான யோசனை ஒன்றை, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இணைந்த மேலும் சில நிறுவனங்கள், வெளிநாடுகளில் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களில் ஈட்டப்படும் வருமானத்தின் ஒரு பகுதியை, பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதன் மூலம், பெருந்தோட்ட மக்களின் வேதனை அதிகரிக்க முடியும் என, நாடாளமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.

இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், அவர் பெருந்தோட்ட மக்களின் வேதனம் குறித்து கருத்து வெளியிட்டார். இதன்போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

வெவ்வேறு வர்த்தகங்களுக்காக, குறித்த நிறுவனங்கள் வெளிநாட்டில் இயங்கி வருகின்றன. எவ்வாறாயினும் பெருந்தோட்ட மக்களின் பங்களிப்புடனேயே, வெளிநாட்டில் உள்ள இந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

எனவே அந்த நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்தி, பெருந்தோட்ட மக்களுக்கான தரமான வேதனத்தை வழங்க முடியும் என, அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத காணிகளை, மக்களுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் ஏதேனும், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? என, நாடாளமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, நாடாளுமன்றத்தில் வைத்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கிய பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் வடிவே சுரேஷ், பெருந்தோட்டங்களில் வெளியாள் உற்பத்தி முறைமை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இது குறித்து, தாம் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சருடனும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக, ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார். பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கான யோசனை ஒன்றை, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இணைந்த மேலும் சில நிறுவனங்கள், வெளிநாடுகளில் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களில் ஈட்டப்படும் வருமானத்தின் ஒரு பகுதியை, பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதன் மூலம், பெருந்தோட்ட மக்களின் வேதனை அதிகரிக்க முடியும் என, நாடாளமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.

இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், அவர் பெருந்தோட்ட மக்களின் வேதனம் குறித்து கருத்து வெளியிட்டார். இதன்போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

வெவ்வேறு வர்த்தகங்களுக்காக, குறித்த நிறுவனங்கள் வெளிநாட்டில் இயங்கி வருகின்றன. எவ்வாறாயினும் பெருந்தோட்ட மக்களின் பங்களிப்புடனேயே, வெளிநாட்டில் உள்ள இந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

எனவே அந்த நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்தி, பெருந்தோட்ட மக்களுக்கான தரமான வேதனத்தை வழங்க முடியும் என, அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத காணிகளை, மக்களுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் ஏதேனும், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? என, நாடாளமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, நாடாளுமன்றத்தில் வைத்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கிய பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் வடிவே சுரேஷ், பெருந்தோட்டங்களில் வெளியாள் உற்பத்தி முறைமை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இது குறித்து, தாம் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சருடனும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக, ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com