Thursday, February 21, 2019

அரசியலமைப்புச் சபையில், எந்தவித சுயாதீன தன்மையும் இல்லை - மஹிந்த ராஜபக்ச.

தற்போதுள்ள அரசியலமைப்புச் சபையில் எந்தவித சுயாதீனத தன்மையும் இல்லை என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்

இன்றைய தினம் நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய அரசியலமைப்புச் சபையில் எந்தவிதமான சுயாதீனத் தன்மையும் இல்லை. காரணம் அந்த சபையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது பிரதிநிதிகளும் அடங்கியுள்ளனர்.

எனவே இந்த அரசியல் அமைப்புச் சபை, பக்கச் சார்ப்புடன் நடந்து கொள்கின்றது. இதனாலேயே அரசியல் அமைப்புச் சபையின் மீது, எமக்கு நம்பிக்கை இல்லை என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com