Sunday, February 24, 2019

மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை - பிரதமர் திட்டவட்டம்

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தோன்றுவதற்கு, ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கந்தளாய் - கல்பொகுணு ரஜமஹா விஹாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் வழியிலான அரசியலில், எந்தவொரு தரப்பினருக்கும் செயற்பட முடியும். அதனை விடுத்து நாட்டில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க எவரேனும் முயற்சிகள் எடுப்பதற்கு, ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.

ஜனநாயக ரீதியில் பயணித்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இந்த நாட்டின் அனைத்து மக்களுக்குமான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதே, தமது முக்கிய நோக்கம். அதற்கான அனைத்து வித நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com