Sunday, February 24, 2019

கண்டியில் நாளை மறுதினம் நீர்வெட்டு அமுலாக்கப்படும்.

கண்டி மாவட்டத்தின் பல இடங்களில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு உட்பட்ட கஹவத்த நீர்ப்பாய்ச்சும் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகளிகள் காரணமாகவே, இந்த நீர் விநோயோகத் தடை அமுலாக்கவுள்ளது.

இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, கண்டி மாவட்டத்தின் கஹவத்த, முல்லேகம, அம்பத்தென்ன, பொல்லேகொட, போகலவல, இராக்கடுவ, ஜம்புஹகபிற்றிய, அம்பேபொல, அக்குரண கசாவத்த போன்ற இடங்களில் நீர்விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நீர்வெட்டு அமுலாக்கப்பட்டுள்ள நேரங்களில், மக்கள் நீரை சேமித்து வைக்குமாறும் அந்த சபை அறிவுறுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com