Sunday, February 24, 2019

விடுதலை புலிகளே மிக மோசமான யுத்த குற்றங்களை செய்தார்கள், இணை அனுசரணை வாபஸ் - ஜனாதிபதி

ஜெனிவாவில் ஐநாவின் 40ஆவது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

ஐநாவின் மனித உரிமைகள் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையில் இருந்து விலக ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பபடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜெனிவா அமர்விற்கு நாங்கள் தயாராகி வருகின்றோம். அதற்கான முன்னேற்றங்களை நாம் காண்பித்துள்ளோம். இலங்கை ராணுவத்தினர் யுத்த குற்றங்களில் ஈடுபடவில்லை. மாறாக, விடுதலை புலிகளே மிக மோசமான யுத்த குற்றங்களில் ஈட்டுபட்டார்கள் என்பதை ஜெனிவா அமர்வில் எடுத்துரைப்போம் என்று ஜனாதிபதி கூறியதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே மனித உரிமைகள் தீர்மானத்தில் இருந்து விலகுவது குறித்த சாதக பாதக நிலைமை தொடர்பில் ஆலோசித்து வருவதாக வெளிவிவகார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் தீர்மானத்தில் இருந்து விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளமையால் கடந்த 2015 ஆண்டு செம்டம்பர் 20 ல் இலங்கை கடைப்பிடித்து வந்த உத்தியோக பூர்வ நிலைப்பாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் குறித்த அதிகாரி சுட்டிக்காட்டினார் .

எவ்வாறான போதிலும் ஜனாதிபதி எடுக்க இருக்கும் இந்தத் தீர்மானம் சர்வதேச அளவில் பெரும் பிரச்சினைகளை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com