Saturday, February 23, 2019

செஹான் சேமசிங்க கூறுகிறார், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும் சுயமாக பதவி விலகிக் கொள்ள வேண்டும் என்று செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்,ஷ அரசியலமைப்பு பேரவையில் உறுப்பினராக இருந்தும் எவ்வித கடமைகளையும் இதுவரையில் பொறுப்பேற்காத நிலையில், பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும் சுயமாக பதவி விலகிக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர் தரப்பில் இருக்கும் நாம் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் தெரிவிற்கு ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பினையே தெரிவித்து வந்தோம். அரசியல்வாதிகளினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறும்பொழுது அங்கு சுயாதீனத்தன்மை காணப்படாது.

பிரதமர் தனக்கும் தனது கட்சிக்கும் ஆதரவானவர்களை முக்கிய பொறுப்புகளை வகிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கினார். பிரதமரை போன்றே சபாநாயகரும் நடந்து கொண்டார். இவர்களின் இந்த மாதிரியான செயற்பாடு ஜனாதிபதியை அதிருப்தி அடைய வைத்தது.

எனவே அரசியலமைப்பு பேரவையினை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என்பதனால், அரசியலமைப்பு பேரவையினால் எவ்விதமான பயனும் இல்லை என்றும் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com