Saturday, February 23, 2019

எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்

2019 ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை, எதிர்வரும் திங்கட்கிழமை நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் கடந்த 13ம் திகதி வெளியான தினகரன் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்தோடு, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் மாதிரி விண்ணப்பப்படிவதை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com