Monday, February 4, 2019

எவர் மீதும் சார்ந்திராத இலங்கையை உருவாக்குவதற்கு நாம் ஒன்றுபட வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர்

ஏமாற்றுத்தனங்களுக்கும், அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் ஒரு தேசமாக மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாகவே, நமது தேசிய கொடியானது உருவாக்கப்பட்டு, நமக்கே உரிய பன்முகதன்மையை நமது முன்னோர்கள் வெளிப்படுத்தினார்கள். எனவே எவர் மீதும் சார்ந்திராத இலங்கையை உருவாக்குவதற்கு நாம் ஒன்றுபட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

71 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையர் பலர் ஜாதி மத பேதமின்றி ஒருமித்து நின்று ஒன்றாக பயணித்து சுதந்திரத்தை வென்று அதனை எமக்கு விட்டுச் சென்றுள்ளனர். அவர்களால்தான் தற்போதைய இலங்கையானது, சுயாட்சியுடைய இறையாண்மை தேசமாக, சுய ஆணையின் கீழான நீதி நெறிமுறைகளுக்கு அமைவாக இயங்கும் வல்லமையுள்ள தேசமாக திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com