Monday, February 4, 2019

எமது பயணம் தொடரவேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்

அரசியல், பொருளாதார, கலாசார, சமூக சுதந்திரத்தினை அனைத்து மக்களும் பெற்றுக்கொள்ளும் வரையிலும் எமது பயணம் தொடரவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பிரித்தானியர்கள் ஆட்சியிலிருந்து நமது நாடானது விடுதலை பெற்றமை எமது மண்ணிற்கு பெருமையே. ஆனாலும், எமது பயணம் தொடரவேண்டும். அதற்காக ஜனாதிபதியும், ஏனையவர்களும் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதினம் தொடர்பில் வடக்கு ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 71ஆவது சுதந்திரதின விழாவைக் கொண்டாடும் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட் அனைத்து இலங்கையர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், அமைதியாக அனைவரும் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com