Monday, February 4, 2019

பெற்ற குழந்தையை கொலை செய்த கொடூரத் தாய் கைது

4 வயது மகளை கொலை செய்து கலா ஓயாவிற்குள் வீசிய தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம், சாலியவெவ பகுதியில் 29 ஆம் திகதி முதல் தாயொருவர் தனது குழந்தை காணாமல் போயுள்ளதாக பொலீஸாரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அயலவர்கள் சிறுமிக்கு அவரது குடும்பத்தினராலேயே ஆபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலீஸாரிடம் சந்தேகம் தெரிவித்ததை அடுத்து தாயரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

நேற்றைய தினம் முறைப்பாடு செய்த தாயாரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலீசாருக்கு, தனது குழந்தையை தானே கொலை செய்து ஆற்றில் வீசியதாக குறித்த தாய் வாக்கு மூலம் அளித்துள்ளார். தெனுரி திஸாரா என்ற 4 வயதுடைய சிறுமியே இவ்வாறு கொலை செய்யப்பட்டு கலா ஓயாவிற்குள் வீசியதாக சிறுமியின் தாய் குறித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் 21 வயதான குறித்த தாய் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த சிறுமியின் சடலத்தை தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com