Monday, February 4, 2019

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றமை ஜனநாயகத்துக்குப் பெரும் பிரச்சினை - ஜனாதிபதி

சுமார் ஒன்றரை வருட காலம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருக்கிறமை ஜனநாயகத்துக்குப் பெரும் பிரச்சினையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு, காலிமுகத்திடலில் இடம்பெற்ற 71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

தேர்தல் நடைபெறாமல் இருப்பது ஜனநாயகத்துக்காக குரல் கொடுப்பதாக கூறிக் கொள்ளும், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஒரு பொருட்டே அல்லவெனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த நூற்றாண்டுக்கேற்ப நாம் எமது பொருளாதார யுக்திகளை வகுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார். சுதந்திரத்தின் பின்னர் இதுவரையில் ஒர் அரசியல் ரீதியான தீர்வையோ, பொருளாதார பிரச்சினைகளுக்கான தீர்வையோ காண முடியாமல் இருப்பதும் ஒரு பின்னடைவையே காட்டுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com