Monday, February 4, 2019

உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறும் சுதந்திரம், எமக்கு கிடைக்கவில்லை - பெருந்தோட்ட தொழிலாளர்கள்.

தமது உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறக் கூட சுதந்திரமற்ற மக்களாக தாம் வாழ்வதாக தெரிவித்து, பெருந்தோட்ட தொழிலாளர்களினால் போராட்டாமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் பொகவந்தலாவ கெம்பியன் நகரத்தில் இன்றைய தினம் காலை, ஆயிரம் இயக்கத்தினரால், கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தில் சுதந்திரமற்ற மக்களாக தோட்ட தொழிலாளர்கள் காணப்படுவதாக தோட்ட தொழிலாளர்கள் விசனம் வெளியிட்டனர்.

அத்தோடு, பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதன்போது பல்வேறும் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கறுப்பு பட்டிகளை அணிந்து கோஷங்களை எழுப்பியவாறும், மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

தமது உழைப்புக்கேற்ற நியாயமான சம்பளத்தை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும், ஏனைய மக்களை போல சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், கல்விக்கான வளங்கள், முகவரிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற கோரிக்கைகளை எழுப்பியாறு, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் மலையக பகுதிகளில் முச்சக்கரவண்டிகளில் கட்டப்பட்டிருந்த தேசிய கொடிக்கு பதிலாக, கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com