Monday, February 4, 2019

ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிராக, நீதிமன்றம் நாடுவோம் - மஹிந்த அணி.

ஐக்கிய தேசிய முன்னணியின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, மஹிந்த அணியினர், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பான பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம், நேற்று முந்தினம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

இந்த நடவடிக்கையானது, அரசியலமைப்பை மீறும் செயல் என்பதே உண்மையாகும்.

அரசியலமைப்புக்கு முரணாண இந்த யோசனையை, நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க வேண்டாம் என, தமது அணி சபாநாயகரிடம் கேட்டுக்கொள்வதாக, டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும், டலஸ் அழகப்பெரும இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முப்பதிற்கும் அதிக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்க வேண்டாம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதன்போது கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும், மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com