Monday, February 4, 2019

மாலியில் உயிரிழந்த இரு படையினரின் உடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 25 ம் திகதி மாலியில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த இரு படைவீரர்களதும் உடல்கள் இன்று பிற்பகல் 3 மணியளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வீசேட விமானத்தில் கொண்டுவரப்பட்ட இவ்வுடலங்களை இராணுவத் தளபதி லெப் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க பொறுப்பேற்றுள்ளார்.

இத்தாக்குதலில் உயிரிழந்த கப்டனும் சிப்பாயும் முறையே மேஜர் மற்றும் சார்ஜன்ட் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நஷ்ட ஈடாக மாலி நாட்டு அரசாங்கம் 50000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அத்துடன் பொலநறுவையைச் சேர்ந்த குறித்த சார்ஜன்டின் வீட்டிற்கு நேரில்சென்று ஜனாதிபதி மைத்திரபால தனது ஆறுதலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com