Friday, February 1, 2019

ஒருபோதும் தேசிய அரசாங்கத்தை உருவாக்க, அனுமதிக்க மாட்டோம் - சாணக்க.

எதிர்கட்சியுடன் தாம் இனைந்துள்ள வரை, தேசிய அரசாங்கத்தை உருவாக்க ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வி.சாணக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் எவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்டாலும், ஐக்கிய தேசிய கட்சியினர் தமது பைகளை நிரப்பி கொள்வதையே இலக்காக கொண்டுள்ளனர்.

குறிப்பாக தேசிய அரசாங்கம் அமைப்பதையும், அமைச்சு பதவிகளை பெறுவதுமே அவர்களின் பிரதான பிரச்சினையாகவுள்ளது.

வரவு – செலவு திட்டத்தை வெற்றிக்கொள்ள அவர்கள் தற்போது முயற்சிக்கின்றனர். அதற்காக அரசியல் அமைப்பை மீறியாவது அவர்கள் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க, முனைப்பு காட்டுகின்றனர். இதற்காக தற்போது நாடாளுமன்றில் யோசனை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாம் எதிர்க்கட்சியில் இருக்கும் வரை தேசிய அரசாங்கம் ஒன்று அமைய ஒருபோதும் விடமாட்டோம்“ என தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com