Friday, February 1, 2019

சுதந்திர தினமன்று இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் யுத்த உபகரணங்கள் முதல்முறையாக வெளிவருகின்றது.

எதிர்வரும் 4 ம் திகதி இலங்கையின் 71 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் இலங்கை இராணுவத்தினரால் உற்பத்தி செய்யப்படும் உபகரணங்கள் முதல்முறையாக வெளிவரவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவக்கும் நிகழ்வுகளின்போது இவை வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை படையினரால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல்வேறு உபகரணங்களுக்கு மூளையாக செயற்பட்ட கலாநிதி சந்தண டி சில்வா மற்றும் பிரிகேடியர் கலாநிதி திரான் த சில்வா ஆகியோருக்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேற்படி உற்பத்திக்கான ஆலோசனை மற்றும் அதற்கு தேவையான பயிற்சி என்பனவற்றை முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவே பெற்றுக்கொடுத்ததாக அறியமுடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com