Friday, February 1, 2019

1000 ரூபாய் சம்பளம் வேண்டி, இன்றும் தொடர் போராட்டம்.

தமக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தி, இரத்தினபுரி – சூரியகந்தை பிரதேசத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று பாரிய போராட்டம் ன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இரத்தினபுரி சூரியகந்தை தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடும்பாவியை ஏந்தியபடி ஊர்வலமாக வந்து சூரியகந்தை சந்தியில் வைத்து கொடும்பாவியை தீ வைத்து எரித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 7 தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 400 இற்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தமக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுத் தருமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சுமார் 4 மணித்தியாலம் வரை இரத்தினபுரி தெனியாய பிரதான வீதியை இடைமறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் படி, தொழிலாளர் ஒருவருக்கு அடிப்படை சம்பளமாக, 700 ரோப்பாவை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

எனினும் இந்த கூட்டு ஒப்பந்தத்திரிக்கு எதிராக, தற்போது பல அமைச்சர்களும், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com