Sunday, June 19, 2022

ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 02 - பிறேம்குமார்

ஹரிபாபு : இவன் ஒரு ப்ரி லாஞ்சர் கேமிராமேன் யாராவது பத்திரிக்கையில் கேமிராமேன் கிடைக்கவில்லை என்றால் கூலிக்கு ஹரிபாபுவை கூட்டி செல்வது உண்டு. அதனால் பல பத்திரிகையாளருக்கு ஹரிபாபு அறிமுகம் உண்டு . ராஜிவ் படுகொலை நடந்த அந்த பொதுகூட்டத்தில் பலர் சிவராசனோடு ஹரிபாபுவை பார்த்து உள்ளனர். அப்படி பார்த்த பத்திரிகையாளர் சாட்சியம் பற்றி பின்னர் சொல்கிறேன்.

சி.பி.ஐ ஹரிபாபு வீட்டில் சோதனை செய்கிறார்கள். ஆனால் எந்த தடயமும் அந்த சின்ன கூரை வீட்டில் கிடைக்க வில்லை. ஹரிபாபு புகைப்படமோ கேமிரா ஸ்டாண்ட் என அவர் சம்பந்தப்பட்ட எதுவும் அங்கே இல்லை. அவர் அம்மா அப்பாவிடமும் எந்த உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை அங்கிருந்து வெளியேறினாலும் அந்த வீட்டை கண்கானிக்க ரகசியமாக காவலரை நியமித்தனர். கண்கானித்த காவலர்கள் அந்த வீட்டின் பின்னே வேறு ஒரு வீடு அவர்களுக்கு இருப்பதையும் அது பூட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இது பற்றி அவர்கள் துப்பு தந்ததும் உடனடியாக அந்த வீட்டை சோதனயிட்டனர் . அங்கே கட்டு கட்டாக விடுதலை புலிகளுக்கு ஆதரவான நோட்டீஸ், புத்தகம் கிடைத்தது அத்துடன் முக்கியனாமன இரண்டு கடிதமும் கிடைத்தது.


ஹரிபாபு வீட்டில் புலிகளின் புத்தகம் நோட்டிஸ் கைப்பற்றும் வரை உளவுதுறை இதில் விடுதலை புலிகளுக்கு தொடர் இல்லை என்றே உறுதியாக நம்பியது அதற்கு காரணம். கிட்டு ராஜிவ் காந்தி கொலை நடைபெற்ற தினத்துக்கு மறுநாள், லண்டனில் இருந்த விடுதலைப் புலிகள் சர்வதேசச் செயலகத் தலைவர் சதாசிவம் கிருஷ்ணகுமார் (கிட்டு), ”இதில் தங்கள் இயக்கத்துக்குத் தொடர்பு இல்லை” என்று அறிவித்தார்.

கிட்டு கூறிய தகவல் ஊடகங்களில் வெளியாகும் முன்னர், இந்திய உளவுத்துறை றோவுக்கு, கிட்டுவால் நேரில் கூறப்பட்டிருந்தது. அதை றோவும் நம்பியது. கிட்டுவின் கூற்றை றோ நம்புவதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது. அதுதான், வில்லங்கமானது!

இந்த இடத்தில் மற்றொரு உண்மையையும் கூறிவிடலாம். இந்திய உளவுத்துறைக்கு ஏற்பட்ட மகத்தான சறுக்கல் என்பதால், நாம் கூறப்போகும் விஷயம் பல வருடங்களாகவே அடக்கி வாசிக்கப்பட்டது. ராஜிவ் கொல்லப்படுவதற்கு முன்பே, விடுதலைப் புலிகள் அமைப்பில் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமாக இருந்த தளபதி கிட்டு, அவரது பிரபல்யம் உச்சத்தில் இருந்தபோது, அவர்மீது, யாழ்ப்பாணத்தில் வைத்து குண்டுவீச்சு ஒன்று நடைபெற்றது. (ராணுவமோ, வெளி ஆட்களோ செய்யவில்லை. புலிகள் இயக்கத்தின் உள் விவகாரம் அது. அதைப்பற்றி இங்கே வேண்டாம்)

அதில் காயமடைந்த கிட்டு தனது ஒரு காலை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின் மருத்துவச் சிகிச்சைக்காக அவர் சென்ற இடம், தமிழகம்! தமிழகத்தில் கிட்டு தங்கியிருந்த காலத்தில், அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது இந்திய உளவு அமைப்பு றோ. ஒரு கட்டத்தில், கிட்டுவை தமது ஆளாகவே நினைத்துக் கொண்டது றோ. இதில்தான் ஏற்பட்டது இந்திய உளவுத்துறையின் மகத்தான சறுக்கல். கிட்டுவை தமது நிரந்தர இன்போர்மராக வேலையில் சேர்த்துக் கொண்ட றோ, அவருக்கு மாதா மாதம் சம்பளமும் வழங்கியது.


கிட்டுவை லண்டனுக்கு அனுப்புவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவு செய்தபோது, றோவுக்கும் அதில் சந்தோஷமே. புலிகளின் வெளிநாட்டு டீலிங்குகள் பற்றிய முழு விபரங்களும் கிட்டு மூலமாகத் தமக்கு தெரியவரும் என்று நினைத்துக் கொண்டது இந்திய உளவுத்துறை. கிட்டு லண்டனில் இருந்தபோதும், றோவினால் மாதாமாதம் வழங்கப்பட்ட சம்பளம் அவருக்கு போய்க் கொண்டு இருந்தது. இப்படியான நிலையில்தான், ராஜீவ் காந்தி கொலை நடைபெற்றது!

இந்திய உளவுத்துறை றோ உடனடியாகவே, தமது இன்போர்மர் கிட்டுவைத் தொடர்பு கொண்டது. ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டார் றோவில் கிட்டுவுக்கான ஹான்டிலர். தான் தகவல் அறிந்து சொல்வதாக கூறிய கிட்டு, அடுத்த சில மணி நேரத்தின் பின், றோவின் அதிகாரியை போனில் தொடர்பு கொண்டார். “நான் விசாரித்து விட்டேன். இதில் புலிகளுக்கு எந்த தொடர்பும் கிடையாது” என்றார் கிட்டு. “இது மிகவும் முக்கியமான விஷயம். மீண்டும் ஒருமுறை உங்கள் தொடர்புகளிடம் நன்றாக விசாரியுங்கள். ராஜிவ் கொலையை, இந்தியாவில் தங்கியுள்ள புலிகளின் உறுப்பினர்கள் யாராவது செய்திருப்பார்களா என்று கேட்டுப் பாருங்கள்” என்று வற்புறுத்தினார் றோ அதிகாரி. அதற்கு கிட்டு கூறிய பதில்தான் கிளாசிக்!

“நான் விசாரித்ததே புலிகளின் தலைமையிடம்தான் (பிரபாகரன்). அவரது அனுமதி இல்லாமல் இப்படியான பெரிய காரியம் ஏதும் புலிகள் இயக்கத்தில் நடக்க முடியாது. இதில் புலிகளின் தொடர்பு இல்லை என்று தலைவர் அடித்துக் கூறுகின்றார் . உண்மையைச் சொல்லப் போனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விஷயம் கேள்விப்பட்டு அவரே அதிர்ந்து போய் இருக்கிறார்” என்பதே கிட்டு கூறிய பதில்!

கிட்டுவின் பதிலுடன், ராஜிவ் கொலையை புலிகள் செய்யவில்லை என்று கன்வின்ஸ் ஆகியது றோ. சி.பி.ஐ.யின் விசேட புலனாய்வுக்குழு விசாரணையைத் தொடங்கியபோது, இந்தியாவின் வெளிநாட்டு விவகாரங்களைக் கவனிக்கும் உளவுத்துறை என்ற வகையில் றோவிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு றோ கூறிய பதில், “இந்தக் கொலையை புலிகள் செய்யவில்லை” என்பதே!

கிட்டு தம்மை ஏமாற்றிய வடுவை நீண்ட காலம் மனதில் வைத்திருந்த றோ, பின்னாட்களில் என்ன செய்தது? கிட்டு கப்பல் மூலம் வன்னி செல்கையில் இந்து சமுத்திரத்தில் வைத்து இந்திய கடற்படையால் தடுக்கப்பட்டார். நடுக்கடலில் நடைபெற்ற சில பேச்சுவார்த்தைகளின்பின், கிட்டு சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க வைத்து, கப்பலையும் அழித்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், றோவும் முக்கிய பங்கு வகித்தது.

நாம் மீண்டும் ஹரிபாபு விடயத்துக்கு வருவோம்
ஹரிபாபு வீட்டில் கைபற்றபட்ட கடிதத்தில் ஒன்று அவர் காதலி சுந்தரி எழுதியது. அதில் அவர் ஹரிபாபு தவறான நபர்களுடன் பழகுவதாகவும் , கொஞ்சம் நாட்களில் முக்கிய காரியம் ஒன்று முடித்ததும் யாழ்பானத்தில் போயி தங்கிடலாம் என ஹரிபாபு கூப்பிடுவதாகவும் இதில் தனக்கு உடன்பாடு இல்லை என எழுதி உள்ளார்.

இரண்டாம் கடிதம் தாஸ் என்னும் முருகன் எழுதியது அதில் தான் கொடுத்து அனுப்பும் பனத்தை பாக்கியநாதனிடம் ( நளினியின் தம்பி) கொடுத்து விடும்படியும் அறிவு ( பேரரிவாளன் ) வந்து வாங்கி கொள்வார் எனவும் எழுதி இருந்தது. முதல் கடித்ததின்படி ஹரிபாபுக்கு ராஜிவ் கொலை நடக்க போவது தெரிந்தே தான் ஸ்ரீ பெரும்புதூர் கூட்டதில் கலந்து கொண்டு இருக்கிறார் என யூகத்துக்கு வர இயலும்.

அப்படி இருக்க அவர் எப்படி குண்டு வெடிப்பில் இறந்தார்? என்ற கேள்வி எழும்.

இதற்க்கான விடையை அடுத்த பதிவில் பார்ப்போம்..

தொடரும் ......

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com