Showing posts with label Premkumar. Show all posts
Showing posts with label Premkumar. Show all posts

Tuesday, November 22, 2022

ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 04 - பிறேம்குமார்

ராஜிவ் கொல்லப்படுவதற்க்கு சரியாக 1 ஆண்டுக்கு முன்பு பேரறிவாளனும் இரும்பொறையும் இலங்கைக்கு சென்றனர் . முத்துராஜா அவர்களுக்கு சில மாதம் முன்பே சென்று விட்டான். இரும்பொறை என்னும் நபர் தி.க வை சேர்ந்த நபர். பேரறிவாளனும் தி.க வை சேர்ந்தவர் என்பது மட்டும் அல்ல இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பொரும்பாலான இந்தியர்கள் திராவிட கழத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எல்லாம் ஆமை கறி தராத பிரபாகரன் சீமானுக்கு மட்டும் ஆமை கறி தந்தது ஒர வஞ்சனை.

சரி நாம் மீண்டும் கொலை வழக்குக்கு வருவோம். இலங்கை சென்ற இந்த இருவரும் முத்துராஜாவுடன் 1990-ம் ஆண்டு அக்டோபரில் இலங்கையிலிருந்து இந்தியா திரும்பினர். இவர்கள் சென்னைக்கு வராமல் கோவைக்கு சென்றனர். பக்கியநாதனையும் கோவைக்கு வர வைத்த முத்துராஜா உளவு பிரிவு நிக்சனுக்கு அறிமுகம் செய்து வைத்தான். கோவையில் உளவு பிரிவு தளம் அமைக்கப்பட்டது.

1991-ம் ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் நிக்சன், மற்றொரு இளைஞரை பாக்கியநாதன் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அவரும் உளவுத்துறையைச் சேர்ந்தவர் என அறிமுகம் செய்து வைத்தார். அந்த இளைஞர்தான், ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முருகன்!

நிக்சன், பாக்கியநாதனிடம் முருகனை அழைத்து வந்ததற்கு காரணம் இருந்தது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் வைத்திருந்ததாக கூறப்பட்டு, 1991 ஜனவரியில் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.(பத்மநாபா படுகொலை பற்றி இதில் எழுதும் பொழுது அதை கொஞ்சம் விரிவாக சொல்கிறேன்)

கவர்னர் ஆட்சி ஆரம்பித்தது.

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டவுடன், தமிழகத்தில் ஏராளமான விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என அறியப்பட்ட முத்துராஜாவை இந்திய உளவுப்பிரிவு கண்காணித்து வந்தது. இதனால், முருகனை தனது வீட்டில் முத்துராஜாவால் வைத்திருக்க முடியவிலலை. இதனால் முருகனை, இந்தியர் வீட்டில் உறவினர் என்று தங்க வைப்பதே பாதுகாப்பானது என்று நிக்சன் முடிவெடுத்தார். அதற்காகவே பாக்கியநாதன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். விடுதலைப்புலிகள் மீது உச்ச அபிமானத்தில் இருந்த பாக்கியநாதன், மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

முருகன் என்னும் ஸ்ரிதரன் இவன் யாழ்பானத்தை சேர்ந்தவன் 1987 ல் விடுதலை புலியில் இணைந்தான். பொட்டாமான் ஆள்( இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது ராஜிவ் காந்தியை கொல்ல அல்ல வரதராஜ பெருமாள் கதையை முடிக்க, இது பற்றி விரிவாக அடுத்து எழுதுகிறேன் )

பாக்கியநாதனுக்கு மட்டுமே இவன் புலி கூட்டம் என தெரியும். மற்றவர்களிடம் தான் இலங்கையில் இருந்து இங்கிலீஸ் கிளாஸ்க்காவும் வேலை தேடியும் இந்தியா வந்தாக குறிப்பிட்டான். பாக்கியநாதன் குடுப்பத்தில் உள்ளோரிடம் நட்பாக பழகினான். மறுபுறம் பேரறிவாளனுடன் சேர்ந்து தினசரி தூர்தர்சன் செய்திகளை VCR ல் ரெக்கார்டு செய்து இலங்கையில் தன் தலைமைக்கு அனுப்பினான். (ராஜிவ் படுகொலைக்கு பிறகு இந்த கேசட்டுகளை தன் நண்பன் வீட்டில் பேரறிவாளன் ஒழிய வைத்து அது கண்டு பிடித்து எடுக்கப்பட்டது )

மேலும் இயக்கத்துக்கான ஆட்களை ஒருங்கிணைப்பது உளவு தளத்தை பலப்படுத்துவது என பிசியாக இருந்தான். இந்த சூழ்நிலையில் தான் பாக்கியநாதன் அக்கா நளினி வீட்டுல் கோவிச்சி கொண்டு வெளியே இருப்பது தெரிய வந்தது. அவரை சமாதானப்படுத்த அவர் கம்பேனிக்கு சென்றான் அவன் அன்பான பேச்சு நளினிக்கு பிடித்து போனது, அடுத்த அடுத்த சந்திப்பு தொடர்ந்தது காதல் மலர்ந்தது . தான் விடுதலை புலிகள் இயக்கத்தில் செயல் படுவதையும் தெரிவித்தான். ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் பயஸ் ( தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டோரில்ஒருவன் ) எல்லோரும்.

விசேஷம் என்னவென்றால் முருகன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய நண்பர்களும் தனித்தனியே தொடர்ந்து நளினியின் அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவருடனும் நளினிக்கு நட்பு ஏற்பட்டது. நெருக்கமானார்கள். நளினிக்கு மகிழ்ச்சிதான். முருகன் என்கிற நபர் அவரது வாழ்க்கையில் வந்த பிறகுதான் அவருக்குத் தன் குடும்பத்தாருடன் இருந்த கோபங்கள் குறைய ஆரம்பித்து, பழைய உறவுகள் பலப்படத் தொடங்கியிருந்தன. புதிதாகவும் பல நட்புகள் கிடைத்திருந்தன. அப்படி ஒருநாள் ஒருவரை அறிமுகப்படுத்தி இவர் தனக்கு மேலான இயக்க பொறுப்பாளர் என்றான் . அவன் பெயர் சிவராசன்.

சிவராசன் யாழ்ப்பாணம், உடுப்பிட்டியை சேர்ந்தவன் பாக்கியச்சந்திரன் என்பது தான் இவன் இயற்பெயர் இயக்கத்தில் ரகு எனவும் சிவராசன் எனவும் அழைக்கப்பட்டான். ஆரம்ப நாட்களில் டெலோ இயக்கத்தில் இருந்த இவன் பின் நாட்களில் விடுதலை புலிகள் இயக்கத்தில் தன்னை இனைத்து கொண்டான். எதையும் மிகவும் நுட்ப்பமாக திட்டமிட்டு செயல் படுத்த கூடியவன். உதாரனமாக இவன் தங்கி இருந்த இடத்தை அதிகாரிகள் கைப்பற்றிய பொழுது அதில் ஸ்ரீபெரும் புதூருக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேருந்து செல்கிறது எந்த எந்த இடத்தில் அவை நிற்க்கும் என்பது முதற்கொண்டு அவன் குறித்து வைத்து இருந்தது தெரிந்தது.


அதே போல அதீத துனிச்சலுக்கு சொந்தகாரனாக இருந்து இருக்கிறான். இவனை ஒட்டு மொத்த இந்திய போலீசும் , ரானுவமும் தேடிய பொழுதும் பொட்டமானை தொடர்பு கொண்டு ராஜிவ் கொலை வழக்கை விசாரிக்கும் மல்லிகை அலுவலகத்தை தாக்க அனுமதி கேட்டு இருக்கான். ராஜிவ் கொலைக்கு முன்பும் பல முறை தமிழ்நாட்டுக்கு இவன் வந்து உள்ளான் . இவன் போரில் கண்பாதிப்புக்கு உள்ளான பொழுது சிகிச்சைக்கு மதுரைக்கு வந்து உள்ளான்.

அதன் பிறகு EPRLF தோழர் பத்மநாபாவை கொலை செய்ய தமிழ்நாட்டுக்கு வந்து உள்ளான் .தோழர் பத்மநாபா பிரபாகரனுக்கு நேர் எதிர் கொள்கையை கொண்டவர் . பிரபாகதரன் சர்வாதிகாரத்தை விரும்புபவர். தோழர் பத்மநாபாவோ அனைத்திலும் ஜனநாயக்கத்தை விரும்புபவர். அதனாலேயே விடுதலை புலிகளோடு முரண்பட வேண்டி இருந்தது. ( தோழர் பத்மநாபா பற்றி தனி தொடரே எழுதலாம் )

விடுதலை புலிகளால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவரும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த தோழர் வரதராஜ பெருமாளும் இந்தியாவில் அடைக்கலம் கோரி தஞ்சம் அடைந்தனர். பத்மநாபாவை கொல்லும் திட்டம் சிவராசனிடமும் , டேவிட்டிடமும் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு உளவு வேலை பார்க்க 20 வயது இளைஞனை பிடித்தனர். அவன் பெயர் சுதந்திர ராஜா என்னும் சாந்தன் தற்பொழுது சிறையில் இருக்கும் 6 பேரில் இவனும் ஒருவன்.

தொடரும்...

Read more...

Monday, November 14, 2022

ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 03 - பிறேம்குமார்

ராஜிவ் குண்டு வெடித்து தான் சாக போகிறார் என தெரிந்த ஹரிபாபு எப்படி அந்த குண்டு வெடிப்பில் சிக்கினான்? இதற்கு விடைக்கான 7/5/1991 க்கு போவோம் அந்த தேதியில் முன்னாள் பிரதமர் வி.பி சிங் தேர்தல் பிரச்சாரத்தில் சென்னையில் கலந்து கொண்டார். முன்னாள் பிரதமருக்கு எந்த அளவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என சோதிக்க விரும்பிய சிவராசன் தனுவிடம் ஒரு டம்மி குண்டை கட்டி வி.பி சிங்கிடம் தனு மாலையிட்டு காலில் விழுந்து பட்டனை அழுத்தி ஒத்திகை பார்ப்பதாக முடிவு செய்தனர்.

விடுதலை புலிகள் தங்களின் முக்கிய தாக்குதல் எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்து ஆவனப்படுத்தும் வழக்கம் வைத்து இருந்தனர் அதன்படி நம்பிக்கையான நபராக ஹரிபாபுவையும் தங்கள் குழுவில் இனைத்து கொண்டனர்.

வி.பி சிங்க் காலில் கெடுபிடியை மீறி தனு விழுந்து டம்மி குண்டு பட்டனையும் சரியாக அழுத்தினார் அப்பொழுது ஏற்பட்ட தடுமாற்றதால் ஹரிபாபுவால் புகைப்படம் எடுக்க இயலவில்லை. இதனால் ஹரிபாபுவை சிவராசன் கடுமையாக கடிந்து கொண்டான்.

ராஜிவ் படுகொலையில் அது போல தவறு நடந்துவிட கூடாது என்ற உந்துததாலும். வெடிகுண்டின் வலிமை தெரியாமலும் கொஞ்சம் நெருங்கி சென்றதே ஹரிபாபு உயிரை பறித்தது.

இரண்டாம் கடித்ததில் பாக்கியநாதன் , தாஸ் ( முருகன் ) , அறிவு ( பேரறிவாளன் ) என புதிய பெயர்கள் கிடைத்தது இவர்கள் யார் ? எப்படி ஒருங்கினைந்தனர் ? என்ற கேள்வி தோன்றியது.
இதற்கு பதில் தேடிய பொழுது அதீத எச்சரிக்கை உனர்வின் காரனமாக வந்து சிக்கி பதில் தந்தார் ஒருவர், அவர் ஹரிபாபுவின் முதலாளி சுபா சுந்திரம் !!

இதற்கிடையே ஹரிபாபு அப்பா தன் மகன் ஹரிபாபுவுக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டு இதில் தன் மகனை சிக்க வைக்க பார்ப்பதாகவும் பிரஸ் மீட் ஏற்பாடு செய்து தெரிவித்தார்.

இதன் பிறகு அவரை சந்தித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பேசியபொழுது தான் அப்படி பிரஸ் மீட் கொடுக்க விரும்ப வில்லை என்றும், ஹரிபாபுவின் முதலாளி சுபா சுந்தரம் தான் அப்படி பிரஸ் மீட் கொடுக்க சொல்லி நெருக்குதல் தந்ததாக சொன்னார்.

மேலும் தன் மகன் இறந்த பிறகு வீட்டில் கட்டுகாடாய் இருந்த விடுதலை புலிகள் நோட்டீஸ் புத்தம் எல்லாவற்றையும் வேறு எங்காவது கொண்டு போயி வைக்கும் படி அவர் சொன்னதாலேயே பின்னாடி வீட்டில் கொண்டு போயி வைத்தாகவும் சொன்னார்.

சுபா சுந்தரம் பிரபலமான போட்டோ சாப் முதலாளி பல்வேறு அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் உள்ளவர்.
இதனிடையே ராஜிவ் கொலை செய்யப்பட்ட பொழுது வந்த பத்திரிக்கையாளர் அனைவரையும் தனி தனியாக விசாரித்தனர்.
அப்போழுது ஒரு நிருபர் தான் ஹரிபாபுவை பார்த்து பேசி கொண்டு இருந்ததாகவும் அப்பொழுது உடன் நின்ற குர்தா கண்ணாடி அனிந்த நபர் ( சிவராசன் ) யார் என்று கேட்ட பொழுது, சுபா ஸ்டுடியோ பார்ட்னர் என ஹரிபாபு சொன்னதாகவும், ஆனால் அந்த நபர் எதுவும் பேச வில்லை என்று குறிப்பிட்டார்.

ஹரிபாபு இறந்த பொழுது அவர் பையை போலீஸ் துளாவிய பொழுது அதில் போட்டோகிராப்பர் ஐ.டி கார்டும் , சுபா ஸ்டுடியோ விசிட்டிங் கார்டும் இருந்துள்ளது. அதை பார்த்துவிட்டு சுந்தரத்துக்கு போன் செய்து ஹரிபாபு இறப்பு பற்றி பேசிய பொழுது, அப்படி யாரையும் தனக்கு தெரியாது என்று சொல்லி உள்ளார். இதை அந்த போலீஸ்காரரும் குறிப்பிட்டு உள்ளார்.

தேள்கடி ராம மூர்த்தி என்ற பத்திரிக்கையாளர் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் சொன்னார்.
அதில் ஹரிபாபு சுபா சுந்தரத்திடம் வேலை பார்க்கும் நபர் என்று தனக்கு தெரியும் என்றும் அன்று தனும் ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்து சென்றதகவும் ஹரிபாபு இறந்தவுடன் சுபா சுந்தரத்துக்கு போன் செய்ததாகவும், அப்பொழுது அவன் செத்தால் சாகட்டும் அந்த கேமிராவை எடுத்து வந்தால் எத்தனை கோடி வேண்டுமானாலும் தருவதாக சொன்னார் என்றும், ஆனால் தான் மறுத்து விட்டதாகவும் போலிஸ் ஸ்டேசனில் வந்து சொல்லி உள்ளார்.


அவர் இதை சொன்ன கொஞ்சம் நேரத்திலேயே தனக்கு இருந்த போலீஸ் நட்பு மூலம் தெரிந்து கொண்ட சுபா சுந்தரம் தேள்கடி ராமமூர்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். பயந்துபோன அவர் சிறப்பு விசாரணை அதிகாரிகளை சந்தித்து உண்மையை சொன்னார். இதனை அடுத்து சுபா சுந்தரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரனையில் புலிகள் பங்கு மேலும் தெரிந்தது.

சுபா சுந்தரத்திடம் நடத்திய விசாரனையில் தனக்கு எதுவும் தெரியாது என்றவர், ஒரு கட்டத்தில் ஹரிபாபு வீட்டில் கைப்பற்றபட்ட பிரசுரம் அச்சடிக்கப்பட்ட இடம் மட்டும் தெரியும் என்றார். அந்த அச்சகம் bbl alrounder என்ற பெயரில் செயல்பட்டது. அதன் உரிமையாளர் பாக்கியநாதன் (நளியின் தம்பி). ஹரிபாபு வீட்டில் கிடைத்த கடித்ததில் பாக்கியநாதன் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது இவரை விசாரனை அதிகாரி நேரில் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். ஹரிபாபுவை தெரியும் என்பதை தாண்டி எந்த விபரமும் பாக்கியநாதனிடம் இருந்து பெற இயலவில்லை.

மேலும் குடும்பத்தை பற்றி விசாரித்த பொழுது தனக்கு ஒரு தங்கை கல்யானி, தாய் பத்மா மட்டுமே இருப்பதாகவும் அப்பா இறந்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார். (அக்கா நளினியை மறைத்து உள்ளார் ) மேலும் நோட்டிஸ் அச்சடித்து கொடுத்தது அவ்வளவு பெரிய குற்றம் இல்லை என்பதால் அதிகாரி திரும்பி வந்தார்.

இதற்கிடையே தஞ்சையில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய ஒரு இலங்கை தமிழரை கைது செய்தனர். அவன் பெயர் சங்கர் என்னும் விக்னேஸ்வரன் என்னும் ரூசோ. அவனிடம் சோதனை செய்ததில் துண்டுச் சீட்டில் இரண்டு டெலிபோன் நம்பர்கள் இருந்தன.

‘நளினி தாஸ் – 2419493’ என்று ஓர் எண். இன்னொன்று, ‘சிவராசா – 2343402.’ அதன் அடிப்படையில் அந்த இரு எண்களுக்கும் போன் செய்து விசாரித்ததில் முதல் எண், அடையாறில் இருந்த அனபான் சிலிக்கான்ஸ் என்னும் நிறுவனத்தின் டெலிபோன் நம்பர் என்று தெரிந்தது. இரண்டாம் நம்பர் போரூரில் உள்ள மளிகை கடை எண் என தெரிந்தது.

இதற்கிடையே விசாரணையின்போது ரூசோ, தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்பதை ஒப்புக் கொண்டார். அவர் தஞ்சாவூர் பக்கத்தில் நடமாடிய காரணத்தால், அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அவரை விசாரித்தார்கள். அந்த விசாரணையில் ரூசோ, மற்றொருவரைக் காட்டிக் கொடுத்தார்.

இந்த நபர், தஞ்சாவூரில் இருந்து அதிக தொலைவில் இல்லாத கடலோர கிராமமான திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர். தொழில் ரீதியாக கடத்தல்காரர். விடுதலைப் புலிகளுக்கு தேவையான பொருட்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைப்பதில் இவர் உதவுவதாக ரூசோ தெரிவித்தார். தமிழக போலீஸார் இந்த திருத்துறைப்பூண்டி கடத்தல்காரரைக் கைது செய்தனர். அவரை விசாரித்தபோது, புலிகளுக்கு தேவையான பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதற்கு உதவி செய்வதை அவர் ஒப்புக் கொண்டார். அதில் புலனாய்வுக்குழு அதிகம் அக்கறை காட்டவில்லை. காரணம் அந்தக் காலப் பகுதியில், தமிழகத்தின் கடலோரப் பகுதியில் வசித்த பலரது முழுநேர தொழிலே, புலிகளுக்கு பொருட்கள் அனுப்புவதுதான். மத்திய, மாநில அரசுகள் அதை கண்டும் காணாமலுமாக இருந்து வந்தன.

இதனால், புலிகளுக்காக பொருட்கள் கடத்துவதை பெரிய தண்டனைக்குரிய குற்றமாக கருதி அவரை விசாரிக்கவில்லை புலனாய்வுக்குழு. அவர்களது விசாரணை முழுவதும் ராஜிவ் கொலையை மையமாக வைத்தே இருந்தது. ராஜிவ் கொலையுடன் புலிகளுக்கு ஏதாவது தொடர்புகள் இருந்தனவா என்ற விபரங்களை அறியும் விதத்திலேயே கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த திருத்துறைப்பூண்டி கடத்தல்காரருக்கு விடுதலைப்புலிகளுடன் நல்ல பரிச்சயம் இருந்தது. ஆனால், புலிகள் ஸ்ரீலங்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும்போது மட்டுமே இவரைக் கடந்து செல்வார்கள். கடற்கரையில் இருந்து தமிழகத்துக்குள் சென்று சென்றுவிட்டால், அவர்கள் என்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது இவருக்கு தெரியாது. தமிழகத்தின் எந்த நகரத்துக்கு செல்கிறார்கள் என்றுகூட இவருக்கு தெரியாது.

இதனால் இந்தக் கடத்தல்காரரிடம் இருந்து உபயோகமான தகவல் ஏதும் புலனாய்வுக் குழுவுக்கு கிடைக்கவில்லை. விசாரணையை முடித்துக்கொண்டு அவரை அனுப்பிவிடலாம் என இவர்கள் முடிவு செய்த நேரத்தில், என்ன தோன்றியதோ, புலனாய்வு அதிகாரி ஒருவர் தமது ஜீப்புக்குச் சென்று அதன் கிளவ் கம்பார்ட்மென்ட்டில் வைக்கப்பட்டிருந்த கவர் ஒன்றை எடுத்து வந்தார். அதனுள் சில போட்டோக்கள் இருந்தன. ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன், ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அவை. அந்த போட்டோக்களை கடத்தல்காரரிடம் காட்டிய புலனாய்வு அதிகாரி, “இந்த போட்டோவில் இருப்பவர்களில் யாரையாவது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.

போட்டோக்களைப் பார்த்துவிட்டு கடத்தல்காரர், “இதோ இவரைத் தெரியும்” என்று காட்டிய நபரைக் கண்டதும் அதிகாரிகளுக்கு தூக்கிவாரிப் போட்டது. காரணம் இவர்கள் ‘அடையாளம் தெரியாத மர்ம நபர்’ என ‘எக்ஸ்’ போட்டு வைத்திருந்த நபர் அவர். போட்டோவில் குர்தா-பைஜாமா அணிந்து கொண்டிருந்த அந்த நபர் யார் என்று அறிவதற்குதான் இவர்கள் பத்திரிகை விளம்பரம் எல்லாம் கொடுத்து தலைகீழாக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்!

“சரியாகப் பார்த்துச் சொல்லுங்கள். போட்டோவில் உள்ள இந்த நபரையா தெரியும் என்கிறீர்கள்?”
“ஆம். இவரேதான். இவர் கடல் வழியாக தமிழகத்துக்கு வரும்போது சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். இவரும் விடுதலைப்புலிதான்”
“இவருடைய பெயர் தெரியுமா?”
“சிவராசன் என்று அழைப்பார்கள். இவருக்கு ஒரு கண் மட்டும்தான் உண்டு. மற்றைய கண் ராணுவத்துடன் யுத்தம் புரிந்தபோது பறிபோனதாக சொன்னார்”
இந்தக் கட்டத்தில்தான், ராஜிவ் கொலையின் மாஸ்டர்மைன்ட் நபரின் பெயர் சிவராசன் என்பது புலனாய்வுக் குழுவுக்கு முதல் தடவையாக தெரியவந்தது.

தஞ்சையில் ரூசோவிடம் இருந்த நளினியின் கம்பேனி போன் நம்பர் ராஜிவ் கொலையில் பங்கேற்றவர்கள் தொடர்பானது என போலிஸ் நினைக்கவில்லை. எனவே அந்த நம்பருக்கு போன் செய்து நளினியை கேட்டதும் அவர் வேலைக்கு வரவில்லை என்ற பதில் கிடைத்ததும் சரி என்று விட்டு விட்டனர்.
இதற்கிடையே ராஜிவ் கொலையில் ஹரிபாபு எடுத்த போட்டாவை மேசையில் வைத்து அதிகாரிகள் பேசி கொண்டு இருந்த பொழுது அதில் சுபா, நளினி இருக்கும் புகைப்படத்தை வைத்து இது யாராக இருக்கும் என்று பேசி கொண்டு இருந்து உள்ளனர் . அப்பொழுது பாக்கியநாதன் வீட்டுக்கு விசாரனைக்கு சென்று வந்த அதிகாரி நான் இந்த பெண்னை பார்த்து இருக்கேன்.
எங்கே ?
பாக்கியநாதன் வீட்டு பேமிலி போட்டாவில்..

உடனடியா அனைவரும் பாக்கியநாதன் வீட்டுக்கு சென்றனர். இவர்களை பார்த்த பாக்கியநாதன் தப்பிக்க முயற்சி செய்தான். விடாமல் பிடித்து பாக்கியநாதன், அவன் அம்மா பத்மா இருவரையும் கைது செய்தனர். நளினி எங்கே என விசாரித்த பொழுது அவர் காதலன் தாஸ் என்னும் முருகனோடு தலைமறைவாகி விட்டதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டோரிடம் நடத்திய விசாரனையில் சில உண்மைகள் புலப்பட்டது
பேபி சுப்ரமனியம் : விடுதலை புலியின் முக்கிய தலைவர்களிள் ஒருவன். 83 க்கு பிறகு தமிழ்நாட்டில் தங்கிய பேபி சுப்ரமனியம் 89 வரை தமிழ்நாட்டில் விடுதலை புலிகளுக்கான தளத்தை உருவாக்கும் வேலை பார்த்தார் பின் 89 க்கு பிறகு இலங்கை சென்ற பேபி 2009 இறுதி போரில் மே மாதம் உயிர் இழந்தார்.

இவரை பற்றி எதுக்கு இப்ப சம்பந்தம் இல்லாமல் என்று எண்ண வேண்டாம், பேபி சுப்ரமனியம் தமிழ்நாட்டில் தங்கிய காலத்தில் பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கம் பேணினான் , இயக்கத்துக்காக பல இளைஞர்களை தயார் செய்யும் பணியிலும் இருந்தான். அப்படி தான் சுபா சுந்தரத்துடன் நெருக்கமாகி உள்ளான். சுபா சுந்தரத்திடம் வேலைக்கு சேர்ந்த ஹரிபாபு, பாக்கியநாதன் , பேரறிவாளனும் பேபி சுப்ரனியத்துடன் நெருக்கமாகி உள்ளனர்.

இதில் இன்னொரு பெயரும் முக்கியம் அது முத்துராஜா.
முத்துராஜா இந்தியராக இருந்தபோதிலும், ஈழ விடுதலை லட்சியத்துக்காகத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். முத்துராஜாவின் தாயும், தங்கையும் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டை விடுதலைப்புலிகள்தான் வாடகைக்கு எடுத்திருந்தனர். அதில் ஓர் அறை மட்டும் பேபி சுப்பிரமணியத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர் முத்துராஜா இல்லாமல் தமிழகத்தில் எதுவும் செய்வதில்லை என்ற நிலைமை இருந்துள்ளது.
இந்திய அமைதிப் படையுடன் புலிகள் யுத்தம் புரிந்தபின், தமிழகத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்கிக் கொண்டிருந்த காலப்பகுதி அது. யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கு முன் புலிகளின் பிரசுரங்களை அச்சிடுவதற்கு பேபி சுப்பிரமணியத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான அச்சகம், மிகச் சொற்ப விலைக்கு பாக்கியநாதனுக்குத் தரப்பட்டது. அப்படி தான் bbl alrounder அச்சகம் பாக்கியநாதனுக்கு சொந்தமானது அந்த அச்சகத்தை அவரது தொழிலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றபோதிலும், போராளிகள் தொடர்பான அச்சுப்பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாக்கியநாதனிடம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியாவில் பாக்கியநாதனின் அக்கா நளினி, அவரது தாயாருடன் சண்டையிட்டுக் கொண்டு வேறு இடத்தில் தனியாகத் தங்கப் போய்விட்டார். அவருக்கு விருப்பமென்றால், சில நாட்களுக்கு விடுதலைப்புலிகள் வாடகைக்கு எடுத்த வீட்டில் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் தங்கியிருக்குமாறு நளினியை முத்துராஜா கேட்டுக் கொண்டார்.

சில நாட்கள் முத்துராஜா வீட்டில் தங்கியபின், நளினி அங்கிருந்து வெளியேறி மகளிர் விடுதி ஒன்றில் சேர்ந்தார். அதையடுத்து, வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் ஒரு வீட்டைப் பிடித்து வாடகைக்குக் குடியேறினார் நளினி.

இந்த வீட்டில்தான் ராஜிவ் கொலைக்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கின என்கிறார்கள்!

தொடரும்… முந்திய பகுதிகள் தொடர் கட்டுரைப் பகுதியில்..

Read more...

Sunday, June 19, 2022

ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 02 - பிறேம்குமார்

ஹரிபாபு : இவன் ஒரு ப்ரி லாஞ்சர் கேமிராமேன் யாராவது பத்திரிக்கையில் கேமிராமேன் கிடைக்கவில்லை என்றால் கூலிக்கு ஹரிபாபுவை கூட்டி செல்வது உண்டு. அதனால் பல பத்திரிகையாளருக்கு ஹரிபாபு அறிமுகம் உண்டு . ராஜிவ் படுகொலை நடந்த அந்த பொதுகூட்டத்தில் பலர் சிவராசனோடு ஹரிபாபுவை பார்த்து உள்ளனர். அப்படி பார்த்த பத்திரிகையாளர் சாட்சியம் பற்றி பின்னர் சொல்கிறேன்.

சி.பி.ஐ ஹரிபாபு வீட்டில் சோதனை செய்கிறார்கள். ஆனால் எந்த தடயமும் அந்த சின்ன கூரை வீட்டில் கிடைக்க வில்லை. ஹரிபாபு புகைப்படமோ கேமிரா ஸ்டாண்ட் என அவர் சம்பந்தப்பட்ட எதுவும் அங்கே இல்லை. அவர் அம்மா அப்பாவிடமும் எந்த உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை அங்கிருந்து வெளியேறினாலும் அந்த வீட்டை கண்கானிக்க ரகசியமாக காவலரை நியமித்தனர். கண்கானித்த காவலர்கள் அந்த வீட்டின் பின்னே வேறு ஒரு வீடு அவர்களுக்கு இருப்பதையும் அது பூட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இது பற்றி அவர்கள் துப்பு தந்ததும் உடனடியாக அந்த வீட்டை சோதனயிட்டனர் . அங்கே கட்டு கட்டாக விடுதலை புலிகளுக்கு ஆதரவான நோட்டீஸ், புத்தகம் கிடைத்தது அத்துடன் முக்கியனாமன இரண்டு கடிதமும் கிடைத்தது.


ஹரிபாபு வீட்டில் புலிகளின் புத்தகம் நோட்டிஸ் கைப்பற்றும் வரை உளவுதுறை இதில் விடுதலை புலிகளுக்கு தொடர் இல்லை என்றே உறுதியாக நம்பியது அதற்கு காரணம். கிட்டு ராஜிவ் காந்தி கொலை நடைபெற்ற தினத்துக்கு மறுநாள், லண்டனில் இருந்த விடுதலைப் புலிகள் சர்வதேசச் செயலகத் தலைவர் சதாசிவம் கிருஷ்ணகுமார் (கிட்டு), ”இதில் தங்கள் இயக்கத்துக்குத் தொடர்பு இல்லை” என்று அறிவித்தார்.

கிட்டு கூறிய தகவல் ஊடகங்களில் வெளியாகும் முன்னர், இந்திய உளவுத்துறை றோவுக்கு, கிட்டுவால் நேரில் கூறப்பட்டிருந்தது. அதை றோவும் நம்பியது. கிட்டுவின் கூற்றை றோ நம்புவதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது. அதுதான், வில்லங்கமானது!

இந்த இடத்தில் மற்றொரு உண்மையையும் கூறிவிடலாம். இந்திய உளவுத்துறைக்கு ஏற்பட்ட மகத்தான சறுக்கல் என்பதால், நாம் கூறப்போகும் விஷயம் பல வருடங்களாகவே அடக்கி வாசிக்கப்பட்டது. ராஜிவ் கொல்லப்படுவதற்கு முன்பே, விடுதலைப் புலிகள் அமைப்பில் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமாக இருந்த தளபதி கிட்டு, அவரது பிரபல்யம் உச்சத்தில் இருந்தபோது, அவர்மீது, யாழ்ப்பாணத்தில் வைத்து குண்டுவீச்சு ஒன்று நடைபெற்றது. (ராணுவமோ, வெளி ஆட்களோ செய்யவில்லை. புலிகள் இயக்கத்தின் உள் விவகாரம் அது. அதைப்பற்றி இங்கே வேண்டாம்)

அதில் காயமடைந்த கிட்டு தனது ஒரு காலை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின் மருத்துவச் சிகிச்சைக்காக அவர் சென்ற இடம், தமிழகம்! தமிழகத்தில் கிட்டு தங்கியிருந்த காலத்தில், அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது இந்திய உளவு அமைப்பு றோ. ஒரு கட்டத்தில், கிட்டுவை தமது ஆளாகவே நினைத்துக் கொண்டது றோ. இதில்தான் ஏற்பட்டது இந்திய உளவுத்துறையின் மகத்தான சறுக்கல். கிட்டுவை தமது நிரந்தர இன்போர்மராக வேலையில் சேர்த்துக் கொண்ட றோ, அவருக்கு மாதா மாதம் சம்பளமும் வழங்கியது.


கிட்டுவை லண்டனுக்கு அனுப்புவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவு செய்தபோது, றோவுக்கும் அதில் சந்தோஷமே. புலிகளின் வெளிநாட்டு டீலிங்குகள் பற்றிய முழு விபரங்களும் கிட்டு மூலமாகத் தமக்கு தெரியவரும் என்று நினைத்துக் கொண்டது இந்திய உளவுத்துறை. கிட்டு லண்டனில் இருந்தபோதும், றோவினால் மாதாமாதம் வழங்கப்பட்ட சம்பளம் அவருக்கு போய்க் கொண்டு இருந்தது. இப்படியான நிலையில்தான், ராஜீவ் காந்தி கொலை நடைபெற்றது!

இந்திய உளவுத்துறை றோ உடனடியாகவே, தமது இன்போர்மர் கிட்டுவைத் தொடர்பு கொண்டது. ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டார் றோவில் கிட்டுவுக்கான ஹான்டிலர். தான் தகவல் அறிந்து சொல்வதாக கூறிய கிட்டு, அடுத்த சில மணி நேரத்தின் பின், றோவின் அதிகாரியை போனில் தொடர்பு கொண்டார். “நான் விசாரித்து விட்டேன். இதில் புலிகளுக்கு எந்த தொடர்பும் கிடையாது” என்றார் கிட்டு. “இது மிகவும் முக்கியமான விஷயம். மீண்டும் ஒருமுறை உங்கள் தொடர்புகளிடம் நன்றாக விசாரியுங்கள். ராஜிவ் கொலையை, இந்தியாவில் தங்கியுள்ள புலிகளின் உறுப்பினர்கள் யாராவது செய்திருப்பார்களா என்று கேட்டுப் பாருங்கள்” என்று வற்புறுத்தினார் றோ அதிகாரி. அதற்கு கிட்டு கூறிய பதில்தான் கிளாசிக்!

“நான் விசாரித்ததே புலிகளின் தலைமையிடம்தான் (பிரபாகரன்). அவரது அனுமதி இல்லாமல் இப்படியான பெரிய காரியம் ஏதும் புலிகள் இயக்கத்தில் நடக்க முடியாது. இதில் புலிகளின் தொடர்பு இல்லை என்று தலைவர் அடித்துக் கூறுகின்றார் . உண்மையைச் சொல்லப் போனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விஷயம் கேள்விப்பட்டு அவரே அதிர்ந்து போய் இருக்கிறார்” என்பதே கிட்டு கூறிய பதில்!

கிட்டுவின் பதிலுடன், ராஜிவ் கொலையை புலிகள் செய்யவில்லை என்று கன்வின்ஸ் ஆகியது றோ. சி.பி.ஐ.யின் விசேட புலனாய்வுக்குழு விசாரணையைத் தொடங்கியபோது, இந்தியாவின் வெளிநாட்டு விவகாரங்களைக் கவனிக்கும் உளவுத்துறை என்ற வகையில் றோவிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு றோ கூறிய பதில், “இந்தக் கொலையை புலிகள் செய்யவில்லை” என்பதே!

கிட்டு தம்மை ஏமாற்றிய வடுவை நீண்ட காலம் மனதில் வைத்திருந்த றோ, பின்னாட்களில் என்ன செய்தது? கிட்டு கப்பல் மூலம் வன்னி செல்கையில் இந்து சமுத்திரத்தில் வைத்து இந்திய கடற்படையால் தடுக்கப்பட்டார். நடுக்கடலில் நடைபெற்ற சில பேச்சுவார்த்தைகளின்பின், கிட்டு சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க வைத்து, கப்பலையும் அழித்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், றோவும் முக்கிய பங்கு வகித்தது.

நாம் மீண்டும் ஹரிபாபு விடயத்துக்கு வருவோம்
ஹரிபாபு வீட்டில் கைபற்றபட்ட கடிதத்தில் ஒன்று அவர் காதலி சுந்தரி எழுதியது. அதில் அவர் ஹரிபாபு தவறான நபர்களுடன் பழகுவதாகவும் , கொஞ்சம் நாட்களில் முக்கிய காரியம் ஒன்று முடித்ததும் யாழ்பானத்தில் போயி தங்கிடலாம் என ஹரிபாபு கூப்பிடுவதாகவும் இதில் தனக்கு உடன்பாடு இல்லை என எழுதி உள்ளார்.

இரண்டாம் கடிதம் தாஸ் என்னும் முருகன் எழுதியது அதில் தான் கொடுத்து அனுப்பும் பனத்தை பாக்கியநாதனிடம் ( நளினியின் தம்பி) கொடுத்து விடும்படியும் அறிவு ( பேரரிவாளன் ) வந்து வாங்கி கொள்வார் எனவும் எழுதி இருந்தது. முதல் கடித்ததின்படி ஹரிபாபுக்கு ராஜிவ் கொலை நடக்க போவது தெரிந்தே தான் ஸ்ரீ பெரும்புதூர் கூட்டதில் கலந்து கொண்டு இருக்கிறார் என யூகத்துக்கு வர இயலும்.

அப்படி இருக்க அவர் எப்படி குண்டு வெடிப்பில் இறந்தார்? என்ற கேள்வி எழும்.

இதற்க்கான விடையை அடுத்த பதிவில் பார்ப்போம்..

தொடரும் ......

Read more...

Saturday, June 11, 2022

ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 01 - பிறேம்குமார்

சரியாக 31 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ பெரும் புதூரில் இனவாதிகளால் கொல்லப்பட்ட தன் தாய் இந்திராவின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வரும் வழியில் இடைமறித்து மாலையிட்ட கூட்டத்தின் நடுவில் இருந்த தற்கொலை படை பெண் தனுவால் கொல்லப்பட்டார் ராஜிவ். அவருடன் 10 பொது மக்களும் 6 காவலர்களும் உயிர் இழந்தனர், பலர் காயமுற்று உறுப்புகளை இழந்து கதறினர், ராஜிவ் உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பபட்டது.

காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிய பின்னர் இறந்தவர்கள் உடல்களும் உடமைகளும் சேகரிக்கப்பட்டது. அப்பொழுது கேமிராமேன் ஹரிபாபு உடலும் அவனுடன் cannon camera வும் கிடைத்தது குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியில், பல பொருட்கள் சிதறிக் கிடந்தன. அங்கிருந்து ஓடியவர்கள் விட்டுச் சென்ற ஏராளமான செருப்புகள், ஹேன்ட்-பேக்கள், பைகள் என்று தரையெங்கும் பல பொருட்கள் சிதறிக் கிடந்தன.

அந்தப் பொருட்களைப் போல ஒரு பொருளாகவே, இந்த கெனான் காமெராவும், பத்தோடு பதினொன்றாக சேகரிக்கப்பட்டது. எவ்வித உயர் பதவியிலுமில்லாத சாதாரண பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் இந்த காமெரா பத்திரப்படுத்தப் பட்டது. இந்த காமெராவுக்கு உள்ளேயுள்ள பிலிம் ரோலில்தான், மனித வெடிகுண்டாக வந்து ராஜிவ் காந்தியைக் கொன்ற பெண்ணின் உருவமும், அவருக்கு துணையாக வந்திருந்த மற்றையவர்களின் உருவங்களும், குண்டு வெடிப்பைத் திட்டமிட்டுக் கொடுத்தவரின் உருவமும், வெவ்வேறு பிரேம்களில் பதிவாகியிருந்தன. இந்த ஒற்றைக் காமெரா மாத்திரம் புலனாய்வாளர்களின் கைகளில் கிடைக்காதிருந்தால், ராஜிவ் காந்தியை கொன்றது யார் என்பது, இன்றுவரை கேள்விக் குறியாகவே இருந்திருக்கும்!

கேமிராமேன் ஹரிபாபு எடுத்த புகைப்படத்தை பற்றிய முக்கியதுவத்தை தமிழக காவல்துறை அறியும் முன்பே ஹிந்து பத்திரிக்கை அறிந்து இருந்தது. பிரிண்ட் போட கொடுத்த இடத்தில் இருந்து கைப்பற்றி அதை மே 23 ல் வெளியிட்டது. தமிழக காவல்துறையினரிடமிருந்த 10 போட்டோக்களின் நெகட்டிவ் பிலிம் ரோல்களையும், போட்டோ எடுக்க உபயோகிக்கப்பட்ட கேமராவையும் பெற்றுக் கொண்டது சி.பி.ஐ. தமக்குக் கிடைத்த போட்டோக்களை சி.பி.ஐ. ஒவ்வொன்றாக ஆராயத் தொடங்கியது.

முதலாவது போட்டோவில், லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகில வாணி( ராஜிவ்வை சந்திக்க வந்து உயிர் விட்டவர்கள் ) ஆகியோருக்கு நடுவே, யார் என்று அடையாளம் காணப்படாத பெண், நின்றிருந்தார். மனித வெடிகுண்டு என்று ஹிந்து பத்திரிகையால் சந்தேகம் கிளப்பி விடப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சற்று தொலைவில், பைஜாமா-குர்தா அணிந்த மற்றொரு நபர் நின்றிருந்தார். போட்டோவில் இருந்த மூன்று பெண்களும் இறந்துவிட்டனர். ஆனால், அதில் நின்றிருந்த நான்காவது நபரான ஆண், சம்பவம் நடந்த இடத்தில் இறந்து போனவர்கள் பட்டியலில் இல்லை. காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலிலும் அவர் காணப்படவில்லை. யார் அந்த நபர்?

பிலிம் ரோலில் இருந்த முதலாவது போட்டோவே, இரு முக்கிய மர்மங்களை ஏற்படுத்தி விட்டது. லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகில வாணி ஆகியோருக்கு நடுவே நின்றிருந்த பெண், மற்றும் அதே போட்டோவில் இருந்த ஆண் ஆகிய இருவரின் அடையாளமும் தெரியவில்லை என்பது முதலாவது மர்மம். அந்த ஆண், கொல்லப்பட்ட மர்மப் பெண்ணுடன் தொடர்புடைய நபரா? இது, இரண்டாவது மர்மம்.


கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், இந்த முதலாவது போட்டோவை ஹோல்டில் வைத்துக்கொண்டு, மற்றைய ஒன்பது போட்டோக்களையும் ஆராய்ந்தது சி.பி.ஐ.
இரண்டாவது போட்டோவில், பொதுக்கூட்டத்தில் பெண்கள் பகுதியில் இருந்தவர்கள் காட்சியளித்தனர்.
மூன்றாவது போட்டோவில் சினிமா இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ், காங்கிரஸ் ஆதரவாளரும், காண்ட்ராக்டருமான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த மூன்று போட்டோக்களும், பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு ராஜிவ் காந்தி வருவதற்கு முன் எடுக்கப்பட்டிருந்தன.
நான்காவது போட்டோவிலிருந்து எட்டாவது போட்டோ வரையில், ராஜிவ் காந்தி வருகை, பொதுமக்களைப் பார்த்து அவர் கையசைத்தது, காங்கிரஸ் தொண்டர்கள் பலர் ராஜிவ் காந்திக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்தது ஆகியவை காணப்பட்டன.
ஒன்பதாவது போட்டோவில், ராஜிவ் காந்தியிடம் கோகிலவாணி (கோகிலா) கவிதை வாசித்துக் காண்பிப்பது பதிவாகியிருந்தது. அது நடைபெற்ற ஓரிரு நிமிடங்களிலேயே குண்டு வெடித்திருந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.
அந்த வகையில், ராஜிவ் காந்தியை கடைசியாக உயிருடன் எடுக்கப்பட்ட போட்டோ, அந்த ஒன்பதாவது போட்டோதான்! இந்த போட்டோவில், பச்சை, ஆரஞ்சு நிற சல்வார் கமீஸ் பெண், ராஜிவ் காந்தியை நோக்கி நகர்ந்து வந்தது தெரிந்தது.
பத்தாவது போட்டோ, குண்டுவெடிப்பையே காட்டியது.

ராஜிவ் காந்தியும், மற்றையவர்களும் உயிரிழந்த அந்த விநாடி, ஹரிபாபுவின் கேமராவில் பத்தாவது போட்டோவாகப் பதிவாகியிருந்தது. அந்த விநாடியில், போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ஹரிபாபுவும், அவரது கேமரா பதிவு செய்த அதே குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார்.

மறுபுறம் உயிர் இழந்த ஹரிபாபு வீட்டில் விசாரித்தால் எதாவது உண்மை கிடைக்குதா என விசாரிக்க சி.பி.ஐ அதிகாரிகள் சென்றனர். இந்த வழக்கின் முதல் முடிச்சு ஹரிபாபு வீட்டில் அவிழும் என அப்பொழுது அவர்களுக்கு தெரியாது.

ராஜிவ் படுகொலையின் பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சப்.இன்ஸ்பெக்டர் அனுசியா பேட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது இந்த படுகொலை பற்றிய புரிதல் ஏற்பட உதவும்


தொடரும்...

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com