Saturday, February 2, 2019

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அறிவிப்பை வரவேற்ற, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.

பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் 140 ரூபாயாக மேலதிக கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கப் போவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளமையினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பகுதி, பகுதியான வேதனத்தை பெறுவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் கோரிய கடினமான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

தொழிலாளர்களின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு தற்போதைய புதிய கூட்டு ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டது.

இதன்படி தோட்டத் தொழிலாளி ஒரு நாள் தொழிலுக்கு சென்றாலும் 750 ரூபாய் வேதனத்தை பெற்றுக் கொள்ள கூடிய வகையில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் முற்போக்கு கூட்டணி மேலும் 140 ரூபாயை மேலதிக கொடுப்பனவாக பெற்றுக் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளமை வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com