Saturday, February 2, 2019

காணி பத்திரங்கள், உடனடியாக வழங்கப்பட வேண்டும் - தேர்தலை குறிவைத்து நகரும் ஹிஸ்புல்லா.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை காணி உறுதிப்பத்திரங்கள் வழங்காதவர்களுக்கு, உடனடியாக காணி பத்திரங்களை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், மூன்று மாவட்டத்திற்கும் பிரித்து இந்த காணி பாத்திரங்களை கையளிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டும், அவை மக்களுக்கு வழங்கப்படாத நிலையிலும், சிறிய காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும், உள்ளமை தொடர்பாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து கிழக்கு மாகாணத்திலுள்ள இதுவரை வழங்கப்படாத காணி உறுதிப் பத்திரங்கள் அனைத்தும், பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அதன் வேலைகளை பூர்த்தியாக்கி மக்களிடம் கையளிக்கப்பட்ட வேண்டும் என, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதை எதிர்க்கு மட்டக்களப்பின் பல இடங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. எனவே மக்களின் மனங்களை வென்று அடுத்த தேர்தலில் தமக்கான இருப்பை தக்க வைத்துக்கொள்ளவே கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இந்த நடவடிக்கையை முன்னெடுக்கிறார் என, பல்வேறு தரப்பினர் விமர்சனம் முன்வைத்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com