Saturday, February 2, 2019

தமிழர்களை அச்சுறுத்திய ப்ரியங்க பெர்ணான்டோவின் பிடியாணை உத்தரவு மீளப் பெறப்பட்டது!

புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவின் பிடியாணை உத்தரவு மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,.

இலங்கையின் கடந்த சுதந்திர தின நிகழ்வின் போது பிரித்தானியாவிலிருள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

குறிப்பாக அவரது கழுத்தை அறுக்கும் வகையிலான சைகை காட்டப்பட்ட காணொளி வெளியாகி பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் அவர், நாட்டிற்கு திருப்பியழைக்கப்பட வேண்டும் என்றும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும், பல புலம்பெயர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான வழக்கு வெஸ்ட்மின்ஸ்டன் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்து கொல்லப்பட்ட போதே, குறித்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரதம நீதவான் எம்மா அரபுத்னொட் அதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com