Saturday, February 2, 2019

முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்ற சர்வதேச மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்ட இடத்திற்கு இலங்கையில் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் மாணவர்கள் சென்று சந்திப்பை நடத்தியுள்ளனர்.

இந்த மாணவர்கள் நேற்று மாலை முல்லைத்தீவில் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் 695 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இலங்கையில் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் சென்று தங்கள் ஆய்வுகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தற்பாதைய நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்கள்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் ராணுவத்திடம் சரணடைந்த பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com