Saturday, February 2, 2019

மீண்டும் கண்டியில் தீ விபத்து

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற பாரிய தீ விபத்து ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் குறித்த கட்டிடத்திற்கும் அதில் இருந்த பல பொருட்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ பரவலை கட்டுப்படுத்தும் பணியில், கண்டி மற்றும் அதனை அண்மித்த நகரங்களைச் சேர்ந்த தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டனர்.

நீண்ட நேரமாக பாடுபட்டதன் பின்னர், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் கண்டி – யட்டிநுவர பகுதியில் தீக்கிரையான கட்டிடத்தில் இருந்து, 100 அடிகள் தொலைவிலேயே இந்த கட்டிடமும் அமைந்துள்ளது.

எவ்வாறாயினும், தீ பரவல் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பாக இதுவரை காரணம் தெரியவில்லை என்றும், அது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டதை மாதம் எட்டாம் திகதி, கண்டியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் பலரின் கவனத்திற்குச் சென்றது.

இன, மத, மொழி, பால் வேறுபாடுகளைக் கடந்த மனித நேயத்தின் மகத்துவத்தை இந்த சம்பவம் உணர்த்தியிருந்தது.

தனது உயிரைப் பணயம் வைத்து, 3 பிள்ளைகளினதும் மனைவியினதும் உயிரைக் காத்த ராம்ராஜ் என்பவர், நாட்டு மக்கள் பலரதும் இதயத்தில் வீரத் தந்தையாக இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com