Saturday, February 2, 2019

கொழும்பு - கண்டியை இணைக்கும், அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கு சீனா கடனுதவி.

இலங்கையில் பாரிய முதலீட்டு நடவடிக்கைககளை மேற்கொள்ளும் சீனா, புதிய நெடுஞ்சாலை திட்டமொன்றிற்கு கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.

இதன்படி கொழும்பு – கண்டியை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கு சீனா இந்த நிதியுதவியை வழங்கவுள்ளது.

இந்த கடனுதவியின் முதற் கட்டமாக சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து, ஒரு பில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது. இலகு கடன் அடிப்படையில் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

ந்த கடனுதவி திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போதும், இலங்கையில் காணப்பட்ட நிதிப் பிரச்சினை காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், சீனாவின் முதற்கட்ட நிதியுதவியைக் கொண்டு இத்திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இத்திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் ஜப்பானின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com