Monday, February 25, 2019

நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் கைது

கொழும்பு – பம்பலப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டுத் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன் ரனிஷ்க அளுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார். .

குறித்த சம்பவம் தொடர்பில் டிபென்டர் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்னர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  நால்வர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவரை மோதிச் சென்ற டிபென்டர் ரக வாகனம் பத்தரமுல்ல, காஹொட பூங்கா பகுதியில் வைத்து நேற்று கைப்பற்றப்பட்டது. எனினும் வாகனத்தால் மோதிய சாரதி தப்பியோடியிருந்த நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் அதன் உரிமையாளர் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com