Monday, February 25, 2019

சிறந்த பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுனர் நம்பிக்கை

நடப்பாண்டில் சிறந்த பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் மேற்படி கூறினார்.

அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளினால் பொருளாதார வளர்ச்சி வேகம் மூன்று சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்திருந்தது. ரூபாவின் பெறுமதி சரிவை நோக்கி சென்றாலும் தற்போது ரூபாவின் பெறுமதி ஸ்திரத் தன்மையில் இருப்பதாகவும் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கூறினார்.

இந்த நிலையில், இலங்கையின் பணவீக்கத்தை நான்கு சதவீதத்திற்கும் 6 சதவீதத்திற்கும் இடைப்பட்ட மட்டத்தில் பேண முடிந்திருக்கின்றது என்று மேலும் கூறினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com