Monday, February 25, 2019

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 10 பேருக்கு இடமாற்றம்

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 10 பேருக்கு தென் மாகாணத்தில் இடமாற்றம் வழங்குவதற்கு இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

தென் மாகாண விசேட விசாரணை பிரிவிலுள்ள குறித்த 10 பேருக்கும் மாத்தறை பகுதிக்கு வௌியிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு இடம் மாற்றம் வழங்குமாறு கோரி, பொலிஸ் மாஅதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

தென் மாகாண விசேட விசாரணை பிரிவில் கடமையாற்றும் 15 பேருக்கு கடந்த தினத்தில் பொலிஸ் மாஅதிபரினால் மேல் மாகாணத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

இடமாற்றம் வழங்கப்பட்டவர்களில் 4 பேர் இதுவரை கடமைக்கு சமூகமழிக்கவில்லை. குறித்த நால்வரும் இதுவரை கடமைக்கு சமூகமளிக்காமை காரணமாக அவர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியச்சகர் ருவண் குணசேகர குறிப்பிட்டார்.

இதேவேளை கடமைக்கு சமூகமளிக்காத பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

இந்த நிலையில், காலி ரத்கமவில் வர்த்தகர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் உப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கபில நிஷாந்த டி சில்வா மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் விராஜ் மதுஷங்க ஆகியோர் விளக்கமறியலில் வைக்ககப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com