Monday, February 25, 2019

வடக்கில் போட்டியிட்டாலும், தானே வெற்றி பெறுவேன் - பஷில் ராஜபக்ச நம்பிக்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாணத்தில் போட்டியிட்டாலும், தானே வெற்றிபெறுவேன் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டால், அதனை நான் நிராகரிப்பேன்.

அதிகளவு பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் இருப்பதால், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம், எனக்கு கிடையாது.

எனினும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சரியான நேரத்தில் முடிவு செய்வார்.

நான் கட்சியின் உறுப்பினர் மட்டுமே. கட்சியின் எந்தப் பதவியிலும் நான் இல்லை. ஆனால், எனக்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதையோ, அங்கீகாரம் இல்லை என்பதையோ நான் நிராகரிக்கிறேன்.

தற்போது நான் வடக்கிலிருந்து போட்டியிட்டாலும், அதிக வாக்குகளை பெற்று என்னால் வெற்றி பெற முடியும் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com