Monday, February 25, 2019

விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி நாள் இன்று

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள், இன்றுடன் நிறைவு
பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்றுடன் அவை நிறைவடைகின்றன. எவ்வாறாயினும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், எதிர்வரும் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி, எந்த காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com