Monday, February 25, 2019

மனித உரிமை விடயங்கள் வீழ்ச்சி கண்ட போதும், நம்பிக்கை இழக்கப்படவில்லை - ஆரம்ப உரையில் அன்டோனியோ குட்ரெஸ்

உலகம் முழுவதுமுள்ள பரந்த பகுதிகளில், மனித உரிமை விடயங்கள் வீழ்ச்சி கண்டுள்ள போதும், மனித உரிமையை நிலைநாட்டும் விடயத்தில், தான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது அமர்வு ஜெனீவாவில், இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த அமர்வின் ஆரம்ப உரையை நிகழ்த்திய ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

நெருக்கடிகளை தடுத்து, பதற்றங்களை தணித்து, நிலையான அபிவிருத்தி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்த, மனித உரிமையே வழிவகுக்கின்றது.

மனித உரிமையை .நிலை நாட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதும், அதனை பாதுகாக்கவும், சமூக நீதிக்காகவும் வலிமையான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை குடியேற்றவாசிகள் தமது உரிமை தொடர்பில் இன்று உரக்கப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளமை, ஊடகவியலாளர்கள் அச்சமின்றி பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளமை மற்றும் பெருமளவான நாடுகள் மரண தண்டனையை அமுல்படுத்தாமல் உள்ளமை என்பன, மந்த உரிமைகளை நிரூபிக்கும் சிறந்த விடயங்கள் ஆகும்.

அத்துடன் பெண்கள் சுயாதீனமாக செயற்படும் நிலை, வறுமை நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை போன்ற விடயங்களையும் உள்வாங்க வேண்டும்.

எனினும், மனித உரிமை விடயங்களில் சில சவால்கள் காணப்படுவது குறித்து அதிக கரிசனை உக்ள்ளது. பிரிக்க முடியாத மற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட சிவில், அரசியல், சமூக மற்றும் கலாசார உரிமை தொடர்பில் கிக்கா கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.

இதனிடையே தொழிநுட்பத்தை பயன்படுத்தியமையால், பேச்சு சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மூன்று வருட காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு மாத்திரம் சுற்றுச் சூழலியலாளர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவ்வாறானவர்களை பாதுகாப்பதற்கு கூடுதல் நடவடிக்கை எடுப்பதோடு, பொறுப்புக்கூறுதல் அவசியமாகும்.

இதேவேகளை ஒட்டுமொத்த உலகையும் தற்போது அச்சுறுத்தும் ஒன்று காலநிலை மாற்றம் ஆகும். உலகில் 90 வீதத்திற்கும் அதிகமானோர், அசுத்தமான காற்றையே சுவாசிக்கின்றன.

இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் 7 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். அவர்களில் 600,000 பேர் குழந்தைகளாவர். இந்த நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான ஏதுவான செயற்பாடுகளை உலக நாடுகள் செயற்படுத்துவது அவசியம் என, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com