Friday, February 1, 2019

ஜனநாயகமும் வேண்டாம் சோசலிஸமும் வேண்டாம் குடியரசு மட்டும் போதும். சம்பிக்க

இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசு என இலங்கையை அழைக்கவேண்டிய தேவை இல்லை என்றும் இலங்கை குடியரசு என்று மாத்திரம் அழைத்தால் போதுமானது என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டமொன்றை பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துரைத்த அவர், சிலர் பெயரை மாற்றுவது இனவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் இடமளிக்குமென பொய்பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்றனர். ஆனால் இனவாதத்தை தூண்டுகின்றவர்கள் பிரச்சினைகளை கொடுத்தாலன்றி எந்த பிரச்சினையும் வராது என்று தெரிவித்துள்ளார்.

இதேநேரத்தில் இந்நாட்டின் ஜனாதிபதியாவதற்கு சிலர் முண்டியடிக்கின்றனர். ஆனால் இந்நாட்டில் இன்று நடந்திருப்பது என்ன? நாம் செய்து கொண்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விட 3 மடங்கு கடன் உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பில் எவரும் கதைப்பதில்லை. எல்லோரும் நத்தார் பாப்பா போல் நாடு பிரிவது தொடர்பாகவே பேசுகின்றனர்.

புதிதாக நிறைவேற்ற உத்தேசிக்கப்படும் அரசியல் யாப்பில் இலங்கை அழைக்கப்படும் விதத்தில் மாற்றம் ஒன்று ஏற்படும் என்று பா.உ சுமந்திரன் வாதபிட்டிய என்ற சிங்கள நிகழ்சி ஒன்றில் முதன்முறையாக குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com