Friday, February 1, 2019

மைத்திரிபாலவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். நிறைவேறியது தீர்மானம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அவர்களையே நிறுத்தவேண்டும் என பா.உ துமிந்த திஸாநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொது ஜன பெரமுன வுடன் கூட்டமைத்தே எதிர்வரும் தேர்தலை சிறிலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிடவுள்ளது என்று அறிவித்துள்ள நிலையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் பொது ஜன பெரமுன தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்துக்களும் வெளியாகவில்லை.

பொதுஜன பெரமுன வின் பெரும்பாண்மையானா ராஜபக்சர்களில் ஒருவரே தேர்தலில் நிறுத்தப்படவேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளபோது இத்தீர்மானமானது சிக்கலை அல்லது முடிவை கொண்டுவரலமாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com