Friday, February 1, 2019

லண்டன் நீதிமன்றத்திற்கு முன்பாக, புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.

தாம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்த போது, கொலை மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என தெரிவித்து, இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் லண்டனிலுள்ள நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போதே நீதிமன்றத்திற்கு வெளியே அணிதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் அரசியல் குறுக்கீடு மற்றும் அழுத்தம் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றம், தீர்ப்பை மீள பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com