Friday, February 1, 2019

கூட்டு ஒப்பந்தம் வர்த்தமானியில், அறிவிக்கப்பட மாட்டாது - பிரதமர் திட்டவட்டம்.

பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளம் தொடர்பான எந்த தகவல்களும், எதிர்வரும் 05ம் திகதி வெளியாகவுள்ள வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட மாட்டாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான தீர்க்கமான பேச்சுவார்த்தை, இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது நிலைப்பாட்டை திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அடிப்படை சம்பளத்தை 700 ஆக அதிகரிக்க கையெழுத்திட்ட கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக, பிரதமர் ரணில் இந்த நிலைப்பாட்டினை உறுதியாக அறிவித்ததாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அரச கருமை மொழிகள், இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் , கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதில் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன், பிரதி தலைவர்களான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com