Friday, February 1, 2019

சுதந்திர தினத்திற்கு வரமாட்டேன்! அடம் பிடிக்கின்றார் சரத் பொன்சேகா.

எதிர்வரும் 4ம் திகதி இடம்பெறவுள்ள 71 சுதந்திர தினக் கொண்டாட்டங்களை பகிஷ்கரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

இது தொடர்பாக அவரிடம் ஊடகம் ஒன்று வினவியபோது, உலக நடைமுறைகளின் பிரகாரம் பீல்ட் மார்ஷல் ஒருவருக்கு வழங்கப்படும் கௌரவம் வழங்கப்படாதவிடத்து அந்த நிகழ்வில் பங்கு பற்றுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை சரத் பொன்சேகாவிற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சிடமிருந்து அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்றும் அறியமுடிகின்றது.

இதே நேரம் காலிமுகத் திடலில் நேற்று ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெற்றள்ளது. அதன்போது பிரமுகர்களின் பெயர்கள் வர-pசைக்கிரமமாக அழைக்கப்பட்டுள்ளது. அங்கு பீல்ட் மார்ஷலின் பெயர் இடம்பெறவில்லை என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்;டுள்ளது.

இந்த முரண்பாடு தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரை ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு வினவியபோது அவர் கருத்துரைக்க மறுத்துள்ளார்.

இதே நேரம் இம்முறை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் நி-கழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் அவருக்கான அழைப்பிதழ் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com