Sunday, February 3, 2019

புதிய அரசியல் அமைப்பு இவ்வாறு தான் அமைய வேண்டும் - கர்டினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கர்டினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

வட கிழக்கு மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகளை என்பவற்றைத் தீர்ப்பதற்கான சமய மற்றும் அரசியல் ரீதியிலான தேசிய மட்ட கலந்துரையாடல்களை நடாத்தி, அதன் மூலம் அடையாளம் காணப்படும் தீர்வுகளை உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பு தயார் செய்யப்பட வேண்டும் என ரஞ்ஜித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறில்லாமல், 9 மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் சட்ட திட்டங்களினால் முழு நாடும் சிக்கல்களுக்குள் மாட்டிக் கொள்வதாகவும் கர்டினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை மேற்கோள் காட்டி, இலங்கைக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் சுனில் சந்திரகுமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com