Sunday, February 3, 2019

இலங்கையில் புற்றுநோய் நோய் தொடர்பில், வெளிவந்த அதிர்ச்சி தகவல்.

இலங்கை பெண்களில் பெருமளவிலானவர்கள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை பெண்களில் அதிகளவிலானவர்கள் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக பெண்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பு கர்ப்பப்பை புற்றுநோய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை சுகாதார மேம்பாட்டுச் சபையின் பணிப்பாளர் வைத்தியர் பபா பலிஹவடன குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பெண்களை அதிகளவில் தாக்கும் புற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக பபில்லோமா (எச்.பி.வி.) எனும் தடுப்பூசி போடும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

11 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் இந்த தடுப்பூசி போடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ஆபத்தான சூழ்நிலையிலிருந்து பெண் பிள்ளைகளை பாதுகாப்பதற்கு பெற்றோர் முன்வர வேண்டுமெனவும் சுகாதார மேம்பாட்டுச் சபையின் பணிப்பாளர் வைத்தியர் பபா பலிஹவடன வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில், எச்.பி.வி. எனும் தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் கடந்த 2018ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் புற்றுநோயினால் 29 ஆயிரத்து 843 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுச் சபையின் பணிப்பாளர் வைத்தியர் பபா பலிஹவடன
குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com