Sunday, February 3, 2019

தேசிய சுதந்திரதின நிகழ்வுவின், அணிவகுப்பு மரியாதையில் 5848 படைவீரர்கள்.

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வின் அணிவகுப்பு மரியாதையில், 5848 படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், தேசிய சுதந்திரதின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த முறை, இடம்பெறவுள்ள தேசிய சுதந்திரதின நிகழ்வுகளில் 5848 படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 3872 பேரும், கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி 1044 பேரும், விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தி 932 பேரும் அணிவகுப்பு மரியாதையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ்திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, விசேட படைப்பிரிவு உட்பட 920 பேரும், தேசிய மாணவர் செயலணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 302 பேரும் இம்முறை தேசிய சுதந்திர தின அணி வகுப்பு மரியாதையில் பங்கேற்கவுள்ளனர்.

தேசிய சுதந்திரதின நிகழ்வுகளுக்கான அணிவகுப்பு மரியாதையின் ஒத்திகை காரணமாக, இன்று காலை 6.30 மணி முதல் காலிமுகத்திடலை அண்மித்த பகுதிகள், மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com