Sunday, February 3, 2019

சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு, விசேட தொலைபேசி இலக்கமொன்றை குடியவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்தத் தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்த முடியும் என்று திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் பிரதி நிர்வாக அதிகாரி எம்.ஜி.வி. காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 011-574 99 99 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைப் பிரிவின் பிரதி நிர்வாக அதிகாரி எம்.ஜி.வி. காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com